11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி டிரைவர் ஒருவர், கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தான், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஒசூர் அருகே, அங்குள்ள அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு, இன்று திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது.
அத்துடன், அந்த பள்ளி மாணவி, அடிக்கடி வாந்தி எடுத்து உள்ளார். இதனால், பதறிப்போன மாணவியின் பெற்றோர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மாணவியை பரிசோதனை செய்துவிட்டு அதிர்ச்சியடைந்தனர். அதற்கு காரணம், அந்த மாணவி, 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனைக் கேட்டு, மாணவியின் பெற்றோரும் கடும் அதிர்ச்சியடைந்து, அங்கேயே கதறி அழுதனர்.
இதனையடுத்து, ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணிவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியிடம் தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அந்த மாணவியின் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான பிரசாந்த் குமார் என்ற இளைஞர், மாணவியின் குடும்ப நண்பராக அடிக்கடி வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார்.
அப்போது, மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், அந்த மாணவியிடம் அத்து மீறி நடந்திருக்கிறார். இப்படியாக, அந்த மாணவியிடம் அவர் பல முறை அத்து மீறி உடல் ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததால், அந்த மாணவி ஒரு கட்டத்தில் கருவுற்று உள்ளார். இதனையடுத்து, பிரசாந்த் குமார் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல், மற்றொரு சம்பவமாக ஒசூர் அருகே உள்ள தளி என்னும் ஊரில் உள்ள தலைமை காவலரை கொலை செய்ய முயன்ற வழக்கில், குற்றவாளிகள் 2 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தளி காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் 55 வயதான மாரியப்பன்.
இவர், தற்போது கெலமங்கலம் காவல் நிலையத்தில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு, இரவு நேரத்தில் கர்நாடக மாநில எல்லையில் உள்ள கும்மளாபுரம் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, கர்நாடக மாநிலம் அனைக்கல் பகுதியைச் சேர்ந்த 37 வயதான சீனிவாசன், தளி ஜெயந்தி காலணியை சேர்ந்த 33 வயதான உமேஷ், பெங்களூர் ஒசரோடு பகுதியைச் சேர்ந்த 33 வயதான மது ஆகியோர் பணியில் இருந்த மாரியப்பனை தலை, கை, மணிகட்டில் கத்தியால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
இது தொடர்பாக தளி போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த செய்தி கட்டுரையில் பல்வேறு சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் மற்றும் அரசியல் கருத்துகள் குறித்து குறிப்பிடப்படுகின்றன. வன்முறை மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்த சம்பவங்களை எவ்வாறு தடுக்க முடியும் என்று பலரும் சிந்திக்கிறார்கள். தமிழ்நாட்டின் நிலையை பற்றி மேலும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்?