16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரனுக்கு, 22 ஆண்டுகள் சிறை தண்டை விதிக்கப்பட்டு உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காம கொடூரன் பெயிண்டருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது எப்படி என்று பார்க்கலாம்…
திருப்பத்தூர் அடுத்து உள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாதன், அந்த பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.
மஞ்சுநாதனுக்கு, திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த சூழலில் தான், மஞ்சுநாதன் தனது உறவினரின் பெண்ணான 16 வயது சிறுமியை, கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பல முறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இதன் காரணமாக, அந்த 16 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. அப்போது, சிறுமியின் பெற்றோர்கள் அச்சிறுமியை, திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிறுமியை பரிசோதனை செய்த போது, சிறுமி ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து சிறுமியிடம் கேட்டு உள்ளனர். ஆனால், சிறுமி பயந்து போய் எதுவும் சொல்லவில்லை. இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார், சிறுமியிடம் நைசாக பேசி, உண்மையை தெரிந்துகொண்டனர். இனதால், சிறுமியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த உறவினரான மஞ்சுநாதனை அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு, திருப்பத்தூர் மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன்படி, இந்த வழக்கில் தற்போது தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனா குமாரி, “மஞ்சுநாதன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது உறுதியாகி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், “குற்றவாளியான மஞ்சுநாதனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து” நீதிபதி அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.
அத்துடன், இந்த அபராதத்தைக் கட்ட தவறினால், கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில், அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் பி.டி.சரவணன் வாதாடி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயத்தை பெற்றுத்தந்தார். இவ்வழக்கு, திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.