Mon. Jun 30th, 2025

22 வருட பகை.. 21 கொலைகள்.. கிளாமர் காளி கொலையில் இப்ப என்கவுண்டர்! மதுரையில் நடப்பது என்ன?

22 வருட பகை 21 கொலைகள் கிளாமர் காலி கொலை வழக்கில் பிரபல ரவுடியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது. அக்கொலை வழக்கில் மேலும் மூவரை பிடிக்க சென்றபோது காவலரை தாக்கிய சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

மதுரையில் கிளாமர் காலி கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக்காணியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு 29ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கிளாமர் காலி கொலை வழக்கில் முதல் ஆளாக சுள்ளான் முத்துப்பாண்டி என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரபல ரவுடி வெள்ளைக்காணியின் தாயார் ஜெயக்கொடி மற்றும் சிவகங்கை மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் மதுரை கல்மேடு நந்தகுமார், காமராஜபுரம் நவீன் குமார், சென்னை சேர்ந்த கார்த்திக், திருப்பூர் சேர்ந்த அசன், ஆகிய ஏழு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் அந்த கொலை வழக்கில் மேலும் குற்றவாளியாக கருதப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் மதுரை வேலம்மாள் அருகே உள்ள காலி இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை பிடிக்கும் முற்பட்டபோது போலீசார் தாக்கி விட்டு தப்ப முயன்றதால் போலீசார் அவரை சுட்டதில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *