சென்னையில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்; பாலியல் வன்கொடுமை செய்த நபர் சிறையில் அடைக்கட்டு உள்ளார்.
வெள்ளை டீசர்ட்டை அடையாளம் காட்டிய மூதாட்டி. தப்பியோடிய காமுகனுக்கு, கை காலில் எலும்பு முறிவு… மாவுக்கட்டுப் போட்ட போலீசார். என்ன நடந்தது வாங்க பார்க்கலாம்…
சென்னை ஜாம்பஜார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் முதல் தளத்தில் 80 மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். அங்குதான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அதாவது, 80 வயது பாட்டியின் மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில் காலை உணவு எடுத்து வந்து தனது தாயாருக்கு கொடுப்பது வழக்கம் அது போல, கடந்த 7 ஆம் தேதி காலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு தாழ்பாள் போடாமல் இருந்து உள்ளது.
அப்போது, வீட்டினுள் நுழைந்தவுடன் மூதாட்டி ஆடைகள் களைத்து காயங்களோடு மயங்கிய நிலையில் இருந்து உள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மகள், உடனடியாக மூதாட்டியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.
அப்போது, அந்த பாட்டிக்கு உடலில் மார்பு உள்ளிட்ட பல இடங்களில் நகக்கீறல்கள் இருந்து உள்ளது. இதனால், சந்தேகமடைந்த மருத்துவர்கள் மூதாட்டியை பரிசோதனை செய்த போது, அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்து உள்ளது.
இதனையடுத்து, உடனடியாக ஜாம்பஜார் காவல் நிலையத்திக்கு மருத்துவர்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில் ஜாம் பஜார் போலீசாரின் விசாரணையில் 80 வயது மூதாட்டி கடுமையாக தாக்கபட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அத்துடன், மூதாட்டி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “தான் முதல் தளத்தில் வசித்து வருவதாகவும், 6 ஆம் தேதி இரவு கதவையும் ஜன்னலையும் யாரோ உடைப்பது போல இருந்ததாகவும், யார் எனக்கேட்டு கதவை திறந்த போது உள்ளே நுழைந்த வெள்ளை டீ சர்ட் அணிந்து இருந்த நபர் தனது தாடையில் குத்தி தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும், மேலும் தன்னை கீழே தள்ளி தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும், இல்லையெனக் கூறியபோது தன்னை மீண்டும் தாக்கிவிட்டு, நடந்ததை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும், மீண்டும் நாளை வருவேன் எனக்கூறி விட்டு சென்றதாகவும், தன்னால் எழுந்து நடக்க முடியாத நிலையில் மயங்கி விட்டதாகவும்” அந்த பாட்டி தெரிவித்து உள்ளார்.
மேலும், மூதாட்டி கூறிய அடையாளங்களை வைத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான நாகராஜ் என்பதும், மது போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரிய வந்து உள்ளது.
போலீசார் தொடர் விசாரணையில், வேலைக்காக சில நாட்களாக ஜாம்பஜார் பகுதியில் தங்கியுள்ளதும் , வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
திருவள்ளூரில் இருந்து விளம்பர போர்டுகளுக்கு பிரேம் வொர்க் செய்யும் வெல்டிங் வேலைக்காக வந்தாகவும், மதுபோதையில் சாலையில் நடந்து சென்ற போது மூதாட்டியை பார்த்ததாகவும், பணம் பறிக்கும் நோக்கில் சென்று மூதாட்டியிடம் பணம்கேட்டு இல்லையென கூறிய நிலையில் மதுபோதையில் சபலத்தால் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கைதுசெய்யப்பட்ட நாகராஜ் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
முன்னதாக நாகராஜை சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்ட போலீசார் திருவள்ளூர் பகுதியில் வைத்து அவரை கைது செய்யமுற்பட்ட போது, போலீசாரிடம் தப்பிக்க நினைத்து ஓடியுள்ளார். அப்போது, அவர் தவறி விழுந்ததில் நாகராஜுக்கு இடது கை மற்றும் வலது கால் முறிந்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நாகராஜை சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்றக்காவல் வழங்கி உத்தரவிட்டது. பின்னர், நாகராஜை ஜாம் பஜார் போலீசார் சிறையில் அடைத்து உள்ளனர்.