Mon. Jun 30th, 2025

தைப்பூசம் 2025 | பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் வருகை தருவது வழக்கம். இவ்வாறு வரும் தரும் பக்தர்கள் யாணை பாதை, படிப்பாதை, ரோப் கார் சேவை, மின் இழுவை ரயில் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், வருகின்ற பிப்.05 ஆம் தேதி முருகப் பெருமானுக்கு உகந்த தைப்பூசம் விழா பழனியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

இதனையடுத்து பழனிக்கு பாத யாத்திரை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் நாளை (30.01.2025) ஒரு நாள் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *