பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, சமீபத்தில் குஜ்ராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, நாட்டிலேயே மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமான கிர் தேசிய வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்று இருந்தார். அங்கு, லயன் சவாரியும் செய்தார்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் ஜாம் நகரில் முகேஷ் அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள “வந்தாரா” (Vantara) என்ற புதிய வனவிலங்கு பாதுகாப்பு மையத்தை நேரில் சென்று திறந்து வைத்தார். அதோடு அங்கு பராமரிக்கப்படும் வனவிலங்குகளையும் பார்வையிட்டார்.
சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு உள்ள இந்த வனவிலங்கு காப்பகத்தை இனி பொதுமக்களும் பார்வையிடலாம். இந்நிலையில், பிரதமர் மோடி வனவிலங்குகளுடன் விளையாடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.