Mon. Jun 30th, 2025

“தேசிய கல்விக் கொள்கை” விசயத்தி்ல் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சொல்வது என்ன? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்..

செய்தி சுருக்கம்:
–  “பெற்றோரின் எந்த எதிர்பார்ப்பையும் தேசிய கல்விக் கொள்கை பூர்த்தி செய்யவில்லை”.

– “தேசிய கல்விக் கொள்கை வேண்டாம் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் இது குறித்து பேச வேண்டும்”.

– “அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை போர்க்கால அளவில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்”.

– “அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரிகளுக்கும் கிடைக்க வேண்டும்”.

– “பி எம் ஶ்ரீ திட்டத்தைப் பொறுத்தவரை ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு பரிந்துரை பேரில் தமிழகம் கையெழுத்திடவில்லை”.

பிரின்ஸ் கஜேந்திரபாபு பேட்டியை முழுமையாக பார்க்கலாம்..

சென்னை எழும்பூரில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் தேசியக் கல்விக் கொள்கை 2020 ஏன் ஏற்கத்தக்கதல்ல என்பதை விவாதிக்க “தேசிய கல்விக் கொள்கை 2020ஐ நிராகரிப்போம்” என்று பிரகடனப்படுத்தும் www.thesamacheerkalvi.in என்ற புதிய வலைதளம் தொடங்கப்பட்டது. இதனை சென்னை மாநகராட்சி பள்ளியில் முதல் வகுப்பு முதல் தொடங்கி தற்போது 10 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவரின் பெற்றோர் நந்தினி – முரளி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

இதில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தலைவர் இரத்தினசபாபதி மற்றும் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் பள்ளி கல்வி முதல் உயர்கல்வி வரை மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசினார்கள்.

இது குறித்து பேசிய பிரின்ஸ் கஜேந்திர பாபு, “சமீப காலத்தில் தேசிய கட்சியின் மாநில தலைவர் ஒரு வலைதளத்தை தொடங்கி பள்ளிகளுக்கு முன் நின்று மாணவர்களிடம் கையொப்பம் பெறுகிறேன் என்ற அடிப்படையில் பல தகவல்களை பள்ளிகளுக்கு முன்பு எழுதி வைத்திருப்பதையும் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் செய்திகளை பகிர்வதையும் பார்க்க முடிகிறது.

உண்மைக்கு புறம்பான பல தகவல்களை கொண்ட ஒரு வலைதள செய்தியாக அந்த வலைதளத்தில் செய்திகள் உள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 உடைய தொடங்கியது இது பற்றி விவாதிக்க தலைப்புகள் கொடுத்த காலகட்டத்தில் இருந்து பல்வேறு வகைகளில் விமர்சனங்களை நாம் வைத்தோம்.

எதற்குமே ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் கொள்கையாக அறிவித்தார்கள். நீட் ரத்து செய்யப்பட வேண்டும் மாநில அரசு தேசிய கல்வித் தொகையை ரத்து செய்ய சொல்லி தெரிவித்துள்ளது. இதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் முன்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மக்களிடம் கையெழுத்து பெறுகிறோம் என்று மிகப்பெரிய நாடகத்தை நடத்தி வருகிறது.

மும்மொழி கொள்கையை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் யாராலும் ஏற்க முடியாது. தமிழகம் மட்டும் இதை நிராகரிப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் மும்மொழிக் கொள்கை கூடுதல் மொழி கூடாது என்பதும், இருமொழிக் கொள்கை ஏன் தேவை என்பது பற்றியும், தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்பது மற்றும் அதற்கு மாற்றாக என்ன இருக்க முடியும் என்பது பற்றி பேச www.thesamacheerkalvi. in என்ற வலைதளத்தில் தொடங்கியுள்ளோம்.

சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் உழைக்கும் மக்கள் வாழும் இடத்தில் உரையாடல்களை நிகழ்த்தியுள்ளோம். உழைக்கும் மக்கள் மொழியை பார்க்கிறார்கள் பயிற்று மொழியை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பதை பார்க்கிறோம்.

இருமொழிக் கொள்கைதான் ஏற்புடையது மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல என்பது சொல்ல காரணம். கட்சி அரசியலைத் தாண்டி குழந்தையை மையப்படுத்தி அறிவியல் பூர்வமாக இந்த மொழி பிரச்சனையை அணுகுகிறோம். குழந்தை முதலில் எந்த மொழியை பேசி கற்கிறதோ அந்த மொழியில் கல்வி இருந்தால் தான் சரியாக இருக்கும்.

தாய்மொழி, சூழலியல் மொழி என்பது இயல்பாக இருப்பது. இதை தவிர தேவை அடிப்படையில் தவிர்க்க முடியாத காரணத்தால், தேவையையொட்டி ஆங்கிலத்தை படிக்கிறோம்.

மூன்றாவதாக ஒரு மொழி படித்தால் என்ன கஷ்டம் என்கிறார்கள். ஒரு குழந்தையின் நேரத்தை இடத்தை எது நிரப்பப் போகிறது. 75 ஆண்டுகள் ஆகியும் கூட ஒரு பங்கியிருப்பாளராக கூட ஒலிம்பிக்கில் வீரர்களை நம்மால் அனுப்ப முடியவில்லை. ஆரம்ப காலகட்ட வயதில் அந்த குழந்தைக்கான திறமையை கண்டறிந்து அதில் கவனம் செலுத்த முடிந்தால் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கி இருக்கலாம்.

செயற்கை நுண்ணறிவு பேசும் காலத்தில் அடிப்படை கணினி அறிவு தேவைப்படுகிறது. அதற்கு கணினி ஆசிரியர் தேவைப்படுகிறார்.

மூன்றாவது மொழி எதிர்காலத்தில் தன் குழந்தைக்கு எப்படி எதற்காக பயன்பட போகிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள். அடுத்ததாக மூன்றாவது மொழியை கற்பது மொழி அறிவு தானே அது குழந்தைக்கு தேவையற்ற மன அழுத்தம் என்கிறார்கள்.

அரசு கல்லூரி விடுதியில் உணவு கட்டணம் 2000. அரசு கல்லூரியில் இந்த நிலை என்றால் தனியார் கல்லூரியில் நிலை என்ன?. யுஜிசி விதிமுறை முறையாக வழங்காத காரணத்தால் பட்ட மேல் படிப்புக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பாடப்பிரிவுகள் அதிகபட்சம் சுயநிதி பிரிவாக உள்ளது.

இந்திய அரசை பிரதமர் நரேந்திர மோடியை மத்திய கல்வி அமைச்சரை கேள்வி கேட்கிறோம். இத்தனை விஷயங்களை விட்டுவிட்டு புதிதாக மூன்றாவதாக ஒரு மொழியைப் படிக்க சொல்கிறீர்கள் அப்படி படித்தால் இலவசமாக அரசு கல்லூரியில் பட்டப் படிப்பு வாய்ப்பு கிடைக்குமா?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், “10 ஆண்டு காலத்தில் ஒன்று பொருளாதாரம் வளரவில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள் அப்படி இல்லை என்றால், கல்வியை இலவசமாக வழங்குங்கள்.

ஒன்றிய அரசு நிதியை ஏன் நிறுத்துவது என்று கேட்டால் பி எம் ஸ்ரீநிதி திட்டத்தை ஏற்கவில்லை அதனால் பணம் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். சமமான கற்றல் வாய்ப்புக்கு பி எம் ஶ்ரீ பள்ளி எதிராக உள்ளது. இதில் படிக்கும் பிள்ளைகள் உயர்கல்வியை சமாளிக்க சுலபமாக இருக்கும் என்றால் மற்ற பள்ளிகள் என்ன? .

கண்ணியத்தை இழந்தது போல் அரசு பள்ளி மாணவர் நினைக்க முடியாது. வேலைத்திறன் குழந்தை பருவ மாணவர்களுக்கு கொடுக்க கூடாது. பெற்றோரின் எந்த எதிர்பார்ப்பையும் தேசிய கல்விக் கொள்கை பூர்த்தி செய்யவில்லை.

பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மாநில அரசுடையது தான். ஆனால் துணை வேந்தரை நியமிக்கும் பொறுப்புக்கு மாநில அரசு பிரதிநிதி இல்லாமல் செய்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா நாடாளுமன்ற நிலை குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. கல்வி நிலைக் குழு தலைவர் திக் விஜய் சிங் இந்த வடிவத்தில் இது அமல்படுத்தப்பட்டால் கிராமப்புறத்தில் ஒரு அரசுக் கல்லூரி கூட இருக்காது.

தேசிய கல்விக் கொள்கை வேண்டாம் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் இது குறித்து பேச வேண்டும். மாநில அரசின் அதிகார எல்லையில் ஒன்றிய அரசு தலையிடுவது இந்திய அரசு கட்டமைப்பையே சிதைக்கின்ற ஏற்பாடாக அமையும்.

இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா உருவாக்க பணிகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து இந்த வாசோ தான் நிறைவேறுவதை தடுக்க வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவ இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் 2021 குடியரசு தலைவர் ஒப்புதலை விரைந்து பெற அனைத்து கட்சிகளும் இணைந்து போராட வேண்டும். அடுத்த கல்வியாண்டு மருத்துவ இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள சட்டத்தின்படி நடப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

மாநிலக் கல்விக் கொள்கை உரிய பரிந்துரைகள் வழங்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்த குழு தனது அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது அந்த அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

பள்ளிக்கல்வி முதல் உயர் கல்வி வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மூலம் கட்டணமில்லா கல்வி அனைவருக்கும் வழங்கிட வழி செய்யும் சமூக நீதியின் அடிப்படையிலான மாநில கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு விரைந்து அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் உள்ள தகைசால் பள்ளிகள் மாதிரி பள்ளிகளை கலைந்து ஒவ்வொரு பள்ளியையும் பிரத்தியேகமான அந்தப் பள்ளிக்கான சிறப்பு தன்மையுடன் இயங்கும் வகையில் சமமான கற்றல் வாய்ப்பை வழங்க வேண்டும், சமமான கல்வி அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று சமச்சீர் கல்வி என்ற கலைஞர் திட்டம் சென்று சேர வேண்டும் .

நிர்பயா நிதி பெண்களின் பாதுகாப்பு வழங்கப்படுவது அதை மடை செய்யப்படுவதை மாநில அரசு அனுமதிக்க கூடாது. பள்ளியில் பயிலும் மாணவர்கள் குழந்தை பருவத்தில் உள்ளவர்கள் என்பதை உணர்ந்து எந்த வடிவத்திலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் வேலைத்திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது.

துணைவேந்தர் நியமனம் தொடங்கி கல்லூரியில் பேராசிரியர் நியமனம் வரை பல காலிப்பணியிடங்கள் உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களில் முழுமையான மானியத்தை அரசு வழங்கவில்லை அதனால் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் முடங்கி சுயநிதி கல்வி அதிகமாக உள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு முழுமையான மானியத்தை கொடுக்க முன்வர வேண்டும்.

அரசு பள்ளி அரசு கல்லூரிகளுக்கு வழங்கப்படும் முழு உரிமைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை போர்க்கால அளவில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.

மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கவும் நீட் நடைமுறை இல்லாமல் மேல்நிலைப் பள்ளி இறுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெறவும் தமிழ்நாடு மக்கள் வழங்கியுள்ள வாக்கினை மதித்து அதை நிறைவேற்ற தீவிரமாக செயல்பட தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

வட மாநில மொழிகள் அத்தனையும் அளித்தது போல் தென் மாநிலங்களிலும் செய்ய முயற்சிக்கிறார்கள் ஹிந்தியை ஒட்டு மொத்தமாக கொண்டு வந்து அதன் பின் சமஸ்கிருதத்தை நிலைநாட்டுவது தான் அவர்கள் திட்டம்.

ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு பரிந்துரை பெயரில் தான் பி எம் சி திட்டத்தில் கையெழுத்திடுவதா இல்லையா என்பதை முடிவு செய்வோம் என்று தெரிவித்திருந்தார்கள் அந்த குழு இந்தத் திட்டத்தை ஏற்கவில்லை. அதனால், தமிழகம் அதில் கையெழுத்திடவில்லை” என்றும், பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *