Mon. Jun 30th, 2025

“வட மாநில அமைச்சர்கள் ஏன் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை தெரியுமா? காரணம் சொன்ன திருமாவளவன்..

“வட மாநிலத்தில் இருந்து வரும் அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை நாம் பேசினாலும் புரிந்து கொள்வதில்லை அப்படித்தான் பெரும்பாலான அமைச்சர்கள் உள்ளனர்” என்று, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

ஸ்ரீவைகுண்டத்தில் அண்மையில் பேருந்தில் பள்ளி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாணவனை நேரில் சந்திப்பதற்காகவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “திமுகவை ஆட்சியிலிருந்து விரட்ட யாருடனும் கூட்டணி வைப்போம்” என்று எடப்பாடி கூறியது தொடர்பான கேள்விக்கு, பதில் அளித்து பேசிய திருமா, “அது அவருடைய விருப்பம் அவர் யாருடனும் கூட்டணி வைக்கலாம்.கடந்த நான்கு ஆண்டுகளாக திமுக ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்களை திமுக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. ஆகவே திமுக கூட்டணிக்கு பொது மக்களின் ஏகோபித்த ஆதரவு வழக்கம் போல கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு” என்று கூறினார்.

பின்னர், “விடுதலை சிறுத்தை ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு ஏன் கோரவில்லை?” என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த திருமா, “சொல்லக் கூடாது என்று இல்லை ஆட்சியில் பங்கு என்று சொல்லக்கூடிய நேரத்தில் சூழலை பொறுத்து கோரிக்கை வைப்போம். எங்களைப் பொறுத்தவரை கட்சி நலனையும் நாட்டு நலனையும் கருத்தில் கொண்டு தான் முடிவெடுத்தோம் இனி மேலும் முடிவெடுப்போம். எங்களது கட்சியை மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் வரும் அந்த காலத்தை கணித்தெல்லாம் சொல்ல முடியாது மாநில கட்சியாக அங்கீகரித்து இருக்கிறார்கள் ஒரு அதிகார வலிமையான கட்சியாகவும் அங்கீகரிப்பார்கள்” என்றார்.

“தொடர்ந்து முன்மொழிக் கொள்கை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதாப் மன்னிப்பு கூறியது”தொடர்பான கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்கவில்லை, வருத்தமும் தெரிவிக்கவில்லை சொன்ன வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்று தான் கூறியிருக்கிறார்.அவருடைய பேச்சு அநாகரிக்க மற்ற செயல் அதை வரவேற்கக் கூடிய வகையில் தமிழக பிஜேபியினர் பேசுவது அதைவிட அநாகரீகமான செயல் மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஒன்றிய அரசு எத்தகைய அனுகுமுறையை கொண்டிருக்கிறது என தேசிய அளவில் அனைவரும் உணர வேண்டும்” என்றும், திருமா வலியுறுத்தினார்.

மேலும், “வட இந்தியாவில் இருந்து வரக்கூடிய அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது. நாம் ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆங்கிலத்தை அவர்கள் இன்னொரு மொழியாக கற்கவில்லை. என்பது என்னுடை கருத்து ஆகவே ஒரு மொழி கொள்கையை ஹிந்தி பேசக்கூடியவர்கள் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். தமிழக மாணவர்கள் அறிவாளிகளாக மாற்றுவதற்காக அல்ல ஹிந்தியை பேச வேண்டும் என்பதற்காக, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே நாடு, ஒரே மொழி என்பது அல்ல. இது அவர்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது.

இந்தியை யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொடுக்கட்டும் மற்ற பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் இந்தியை திணிப்பதை எதிர்க்கிறோம்” என்றும், திருமாவளவன் பேசினார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *