திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுன் காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் உடனுரை ஶ்ரீ காமாஷி அம்மாள் திருக்கோவிலில், மாங்கல்ய பலம் தந்த கணவரின் ஆயுளை பெருக்கும் காரடையான் நோன்பு பெருவிழா பொன், வெள்ளி நகைத்தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஆலய கும்பாபிஷேக திருப்பணி கமிட்டியாளர்கள் சார்பாக நடைப்பெற்றது.
அத்துடன், அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் உடுமலை ஸ்ரீ காமாட்சி அம்மாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பூ அலங்காரத்தால் ஜொலிக்கப்பட்டு பின்பு தீபாராதனை செய்தனர்.
இதில், லட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் பெற்று காரடையான் நோன்பு சரடு பெற்று கொண்டனர்.
பின்பு, கணவன் ஆரோக்கியமாக இருக்க தீர்க்காயிலா இருக்க, மனைவி தீர்க்க சுமங்கலியாய் இருக்க, கன்னியருக்கு நல்ல மணலான் கிடைப்பார் என்பதற்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அப்போது, பக்தர்கள் தாய்மார்கள் கன்னிப் பெண்கள் அனைவரும் இங்கே வருகை தந்து தீர்க்க சுமங்கலி பலத்தை தரும் நோன்பு பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீ காமாட்சி அம்மாள் அருள் பெற்றனர்.
பின்னர், பூஜை முடிந்தவுடன் அன்னதானம் வெண்ணை ஆயிலை இலை, சரடு, பிரசாதமாக வழங்கப்பட்டது. மாங்கல்ய பலம் தந்த கணவரின் ஆயுளை பெருக்கும் காரடையான் நோன்பு (சரடு) பெருவிழாவில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை அம்மனின் அருள் பெற்று சென்றனர்.