Mon. Jun 30th, 2025

சீமான் இடமிருந்து கத்தி பறிமுதல்! அதிர்ச்சி.. பரபரப்பு..

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருகிணைப்பாளர் சீமான் இடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பேசும் பொருளாக மாறி உள்ளது.

திருச்சி சரக டிஐஜி வருண் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றம் நான்கில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று காலை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அதனை தொடர்ந்து, இன்று மாலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றார். அதற்காக, திருச்சி விமான நிலையத்திற்கு அவர் வந்த போது, சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் அவரை சோதனை செய்தனர்.

அப்பொழுது, சீமான் தனது பாக்கெட்டில் சிறிய அளவிலான கத்தி (Swiss knife) ஒன்றை வைத்திருந்து உள்ளார். இதனைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமான நிலையத்தில் எந்த விதமான ஆயுதங்களும் எடுத்துச் செல்லக்கூடாது என்கிற விதி உள்ளதால், அதனை அவர்கள் பறிமுதல் செய்து அனுப்பி வைத்தனர். இதனால், திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்றொரு நிகழ்வாக, கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மன்னூத்தி நடுசாலையில் சாலையை கடப்பது தெரியாமல், தவித்துக் கொண்டிருந்த பூனையை காப்பாற்றுவதற்காக அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த சிஜோ என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையை கடந்து சென்று பூனையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது, அதி வேகமாக வந்த கார் சிஜோ மீது மோதியது.

இதில், பலத்த காயங்களுடன் சிஜோவின் உடலை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை. இது பற்றி மன்னுத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அத்துடன், சிறு பூனை உயிரை காப்பாற்ற ஒரு இளைஞன், தன்உயிரை விட்டுள்ளது இப்பகுதி மக்களிடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *