பெண்ணை வீட்டிற்கு அழைத்து சாப்பிட வைத்து விறகு கட்டையால் மண்டையை உடைத்த ஆண் நண்பர்.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 13வது தெருவில் ( 26 )மாரிக்கனி என்பவரது வீட்டில் பெண் ஒருவர் கீழே விழுந்து தலையில் காயம் என்று கூறி 108 ஆம்புலன்ஸ்சை வரவழைக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது,தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் காயம் பட்ட பெண் சாயர்புரம் அருகே உள்ள பண்டாரவிளையைச் சேர்ந்த ஜெபா (24)அவரது கணவர் லிங்கதுரை என்பதும் லிங்கத் துறையுடன் இப்போது ஜெப வாழவில்லை என்பதும் தெரிய வந்தது.
ஜெபாவுக்கு வேறு சிலருடன் பழக்கம் இருந்து வந்ததாகவும், அதன் படி மாரிக்கனியுடனும் பழக்கம் ஏற்பட்டு அவரது வீட்டிற்கு வந்து சாப்பாடு வாங்கி சாப்பிட்டு உள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மாரிக்கனி வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து ஜெபாவின் தலையில் அடித்து மண்டையை உடைத்து கீழே விழுந்ததாக தவறாக கூறி ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது, இதனைத் தொடர்ந்து ஜெபா ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதால் போலீசார் பெண்ணை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு மண்டையை உடைத்த மாரிக்கனியை காவல் நிலையம் கூட்டி சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரித்ததில், மாரிக்கனி தான் தலையில் காயம் ஏற்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. காவல்துறை விசாரணையில் ஜெபா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தென்பாகம் காவல்துறையினர் மாரிக் கனியை கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தினர்.