Mon. Jun 30th, 2025

அனாதையாக வளர்ந்த பெண்.. காதலிப்பதாக ஏமாற்றி எரித்து கொன்ற கொடூர காதலன்..!

பெற்றோர் உட்பட ஆதரவற்று ஆசிரமத்தில் வளர்ந்த இளம் பெண்ணை, காதலன் ஒருவன் காதலிப்பது போல் நடித்து 2 முறை கருகலைப்பு செய்ய வைத்து, கொடூரத்தின் உச்சமாக எரித்து கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட மாநிலங்களில் நடைபெறுவது போன்ற சம்பவம், இந்த முறை தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் அரங்கேறி இருக்கிறது.

ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டியிலிருந்து பன்றிமலை அமைதி சோலை அருகே இருக்ககூடிய சுமார் 60 அடி ஆழமான பள்ளத்தில், ஆதி மூலம் நீரோடை ஒன்று அங்கு இருக்கிறது.

அந்த இடத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுமார் 22 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட அடையாளம் தெரியாத ஒரு இளம் பெண்ணின் உடல் சடலமாக, எரிந்த நிலையில் இருப்பதாக அங்கு கால்நடை மேய்ச்சல் செய்பவர்கள், அங்குள்ள கன்னிவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னிவாடி போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், “மதுரையில் பெற்றோர் இல்லாமல், ‘சக்தி விடியல் ஆசிரமத்தில்’ மாரியம்மாள் என்பவர், வளர்ந்து வந்த நிலையில், அவர் தான் இங்கு கொல்லப்பட்டு சடலாமாக கிடக்கிறார்” என்பதை போலீசார் கண்டுப்பிடித்தனர்.

அத்துடன், “கொல்லப்பட்ட மாரியம்மாள், 12 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, மதுரையில் வேலை செய்து வந்து உள்ளார். அங்கு, திண்டுக்கல் நத்தம் சாணார்பட்டி எமகாலபுரத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞனுடன் அந்த பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம், நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

காதல் காரணமாக, பிரவீன் – மாரியம்மாள் இணைந்து திண்டுக்கல்லில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்து உள்ளனர்.

அங்கு, பிரவீன் பாதுகாவலராக கையெழுத்திட்டு, திண்டுக்கல்லில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் மாரியம்மாளை சேர்த்து விட்டு உள்ளார்.

இப்படி, கடந்த ஒரு வருடங்களாக திண்டுக்கல்லில் இருவரும் இருந்து வள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், அவர்களது காதலால், அவர்கள் இருவரையும் மிகவும் நெங்கிப் பழக வந்த நிலையில், 2 முறை மாரியம்மாள் கர்ப்பத்தை கலைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்து உள்ளது. அதன் தொடர்ச்சியாக, “என்னை சீக்கிரமே திருமணம் செய்து கொள்” என்று, மாரியம்மாள் காதலன் பிரவீனை தொடர்ச்சியாக வற்புறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக, காதலர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை எழுந்து உள்ளது.

இந்த சண்டையால், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காதலன் பிரவீன், காதலியான மாரியம்மாளை அங்குள்ள அமைதி சோலை அருகே கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின், இந்த கொலையை மறைக்க, அவர் அந்த பெண்ணின் உடலில் பெட்ரோல் ஊற்றி உடலை எரித்ததாகவும் தெரிய வந்து உள்ளது.

இப்படியாக, எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம் யார் என்று தெரியாத நிலையில் தான், கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை போலீசார் தற்போது வெளியிட்டு உள்ளனர்.

குறிப்பாக, காதலன் பிரவீன்… போலீசாரிடம் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே, இப்படி செய்ததாகவும், ஆனால், போலீசாரின் விசாரணையில் எல்லா உண்மைகளும் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், போலீசாரிடம் அந்த காதலன் எல்லா உண்மையை சொல்லி, அந்த பெண்ணின் அடையாளத்தை கூறி, தனது காதலியை தானே கொன்றதையும் ஒப்புக்கொண்டாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக, பிரவீன் “எப்படி, எவ்வாறு? காதலியை கொலை செய்தார்? என்பது குறித்தும், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *