ஒன்னேகால் பவுன் நகைக்காக தங்கையை கொலை செய்த வழக்கில், அண்ணனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சயூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அதாவது, புதுக்கோட்டை பொன் நகர் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மகள் லோக பிரியா, கடந்த 2019 அமு் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, கணவரின் சம்மதத்தோடு, பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
அப்போது, அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணன் உறவு முறையான திருமயம் அருகே பெருந்துறை பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் என்கிற சுரேஷ், அடிக்கடி லோகப் பிரியா வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக கொண்டிருந்து உள்ளார்.
அப்போது, சித்தியின் மகளான தங்கை லோக பிரியாவிடம் சுரேஷ் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு லோக பிரியாவின் வீட்டிற்கு சென்ற சுரேஷ், லோக பிரியா அணிந்திருந்த ஒன்னேகால் பவுன் தங்கச் செயினை தருமாறு கேட்டு அடம் பிடித்து பிரச்சினையும் செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், தங்கை லோகபிரியா அதனை கொடுக்க மறுக்கவே, வீட்டில் இருந்த கத்தியால் தங்கை என்றும் பார்க்காமல் பிரியாவின் முதுகு மற்றும் கழுத்து பகுதியில் குத்தி உள்ளார். தொடர்ந்து, அங்கு கிடந்த இரும்பு ராடால் பிரியாவின் தலை மற்றும் முகத்தில் தாக்கி உள்ளார். இதில், லோக பிரியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து அங்கேயே உயிரிழந்து உள்ளார்.
பின்னர், அண்ணன் சுரேஷ், லோகப் பிரியா அணிந்திருந்த ஒன்னேகால் பவுன் செயினை திருடிக் கொண்டு, அங்கிருந்து தப்பி சென்று உள்ளார். பின்னர், உயிரிழந்த லோக பிரியாவின் தாயார் சிவகாமி கணேஷ், வீட்டிற்கு திரும்பி வந்த நிலையில், மகளின் உயிரிழந்த கோலத்தைப் பார்த்து கதறி அழுது உள்ளா்ர.
இதனையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதன்படி அடிப்படையில் வழக்கு பதிவுப் செய்த கணேஷ் நகர் போலீசார், லெட்சுமணன் என்கிற சுரேஷை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த வழக்கானது, புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று கொலை குற்றவாளியான லெட்சுமணன் என்கிற சுரேஷுக்கு நீதிபதி சந்திரன், அதிரடியாக தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து, குற்றவாளி லெட்சுமணன் என்கிற சுரேஷ் போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, குற்றவாளி சுரேஷுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதும், அவரது உறவினர்கள் கதறி அழுது “தீர்ப்பு தவறானது” என்று, கூச்சலிட்டு உள்ளனர். அப்போது, அவர்களை போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.
அதே போல், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் “எனது மகளின் கொலைக்கு நீதி கிடைத்து விட்டது என்றும், நன்றி” என்றும் கூறி கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் தீர்ப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.