Mon. Jun 30th, 2025

ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் சிறுநீரகம் தொடர்பான ஒரு பிரச்சனை தான் இந்த ‘சிறுநீரகக் கல்’. இருப்பினும், பெண்களை விட ஆண்களுக்கு தான் இந்த பிரச்சனை அடிக்கடி வரும். பொதுவாக, சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகளை அகற்றி அதை சிறுநீரோடு வெளியேற்றும். ஒருவேளை இரத்தத்தில் அதிகப்படியான கழிவுகள் இருந்தால், உடல் போதுமான சிறுநீரை உற்பத்தி செய்யாது. ​​​

இதனால் சிறுநீரகங்களில் படிகங்கள் உருவாகத் தொடங்குகின்றன. இந்த படிகங்கள் மற்ற கழிவுகள் மற்றும் இரசாயனங்களை கவர்ந்து ஒரு திடமான பொருளை (சிறுநீரக கல்) உருவாக்குகின்றன. இது உடலில் தாங்க முடியாத அளவிற்கு வலியை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், இந்த சிறுநீர கல்லை இயற்கையாகவே வராமல் தடுக்க முடியும். அது எப்படி என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சிறுநீரக கல் வராமல் தடுப்பது எப்படி?

உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலமே சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியும்.
➥ நல்ல சிறுநீர் ஓட்டத்தை பராமரிக்க சரியான அளவு தண்ணீர் குடிப்பது. ஒரு நாளைக்கு குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
➥ குறிப்பாக, எப்போது சிறுநீர் வந்தாலும் அடிக்க வைக்காமல் உடனே கழித்துவிட வேண்டும்.
​​​​​​​➥ உணவில் போதுமான அளவு கால்சியம் இருக்க வேண்டும். எனவே, பால், தயிர், பருப்பு, கீரை, ஆரஞ்சு போன்ற கால்சியம் நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
​​​​​​​➥ முடிந்தவரை உணவில் அதிகளவு உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவும்.
​​​​​​​➥ மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டாம்.
​​​​​​​➥ பாதாம், வேர்க்கடலை, வெண்ணெய், ப்ளூபெர்ரி போன்ற ஆக்சலேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.
​​​​​​​➥ தினமும் உடலுக்கு போதுமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் கல் உருவாதைக் குறைக்க முடியும்.
​​​​​​​➥ ​​​​​​​இளநீர், வாழைத்தண்டு, எலும்பிச்சைச்சாறு போன்றவற்றை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டாலும் சிறுநீரக கல் ஏற்படுவதை தடுக்க முடியும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *