Tue. Jul 1st, 2025

“உரிமை குறித்து பேசினால் அந்த கட்சியோட B டீம் என்று சொல்கின்றனர்” என்று, திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்வில் காட்டமாக பேசி உள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நீதி கேட்டு, இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு இயக்குனர் பா.ரஞ்சித் தலைமை தாங்கினார்.

தொடர்ச்சியாக, ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், “”ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சரியான நீதி வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒன்றுகூடியுள்ளோம். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சரியான நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்” என்று, முழக்கமிட்டார்.

அத்துடன், “காசு கொடுத்து உங்களை யாரும் இங்கு கூட்டி வரவில்லை. ஆம்ஸ்ட்ராங்கிற்காக காசு கொடுத்து கூட்டத்தை கூட்ட முடியாது. திமுக மீது குற்றம் சுமத்துவதற்காக இந்த பேரணி நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர். அரசு அதிகாரிகள், காவல் துறையினர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்” என்றும், அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

“ஆம்ஸ்ட்ராங்கை, ரவுடி என்று கூறி சமூக வலைதளங்களில் எழுதிய அயோக்கியர்கள் யார்?, அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நீங்கள் ரவுடி என்று சொல்வீர்களா?” என்று கேள்வி எழுப்பிய அவர், “அப்படி சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான்” என்றும், பா.ரஞ்சித் பதில் அளித்தார்.

“இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நீங்கள் நினைக்காதீர்கள். இது ஒரு எச்சரிக்கை. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம்” என்றும், அவர் முழுங்கினார்.

மேலும், “காவல் துறை விசாரணையை நாங்கள் நம்புகிறோம். காவல் துறை விசாரணை மீது நம்பிக்கை இருந்தால் எங்களுடைய முடிவுகள் மாறும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு சூழ்ச்சிகள் உள்ளது. என்னை பொருத்தவரை ஆம்ஸ்ட்ராங்கை மீறி எதுவும் நடக்காது. என்னையில் பொறுத்தவரை, எங்களை மீறி நீங்கள் எதுவும் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங் இல்லையென்று யாரும் ஜாலியாக இருந்து விடாதீர்கள். மெட்ராஸை எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது. சென்னையில் மட்டும் 40 சதவீத தலித் மக்கள் உள்ளார்கள்” என்றும், சூளுரைத்தார்.

குறிப்பாக, “நாங்கள் அரசியலற்று இருக்கலாம். ஆனால், அரசியல்வுடைவர்களாக மாறும் பொழுது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் நிலை மாறும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. அவர் இந்து மதத்திற்கு எதிராக போராடியவர். பௌத்த மதத்தை தனது வாழ்க்கை நெறியாக கொண்டவர். இந்த பௌத்தத்தின் சூழலில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்” என்றும், குற்றம்சாட்டினார்.

“மேயர் பிரியா ராஜன், கயல்விழி செல்வராஜ் எப்படி அமைச்சர்கள் ஆனார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிரியா ராஜன் திமுகவில் இருப்பதால் அவர் மேயர் இல்லை. சர்வேஷன் இருந்ததால் தான், பிரியா ராஜன் மேயராகும், கயல்விழி செல்வராஜ் அமைச்சராகவும் பதவி கிடைத்தது.

மேயர் பிரியா ராஜன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இருவரும் ஏன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு குரல் கொடுக்கவில்லை?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

“நீங்கள் திமுக-வில் இருப்பதால் தான் குரல் கொடுக்கவில்லையா? என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

“சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் எப்பொழுது இதற்காக குரல் கொடுப்பீர்கள்?” என்றும், கேள்வி எழுப்பிய பா.ரஞ்சித் “குரல் கொடுக்கவில்லை என்றால் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள்” என்றும், ஆவேசம் பொங்க பேசினார்.

“நாங்கள் ஒண்ணும் அடிமை இல்லை. எங்களுக்கு பயம் ஏதும் கிடையாது. பயமில்லாமல் நாடாடுவோம். பயம் இல்லாமல் ஒன்றிணைவோம்” என்றும், பா.ரஞ்சித் சூளுரைத்தார்.

“திருமாவளனுக்கு எதிராக நான் ஒரு போதும் இருக்க மாட்டேன். திருமாவளவனை ஒரு போதும் விட்டு விடமாட்டோம். அவருடன் தான் இருப்போம். பிஜேபிக்கு நேர் எதிரானவர்கள் நாங்கள். உங்கள் பின்னாடி சும்மா அவர் இருக்கிறார், இவர் இருக்கிறார் என்று பிம்பத்தை உருவாக்காதீர்கள். எங்களுடைய பிரதிநிதித்துவம் இங்கு இல்லை. என்னை நீங்க சமூகநீதி மாடல்? பல ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நான் திமுக விற்கு எதிராக பேசவில்லை. அனைத்துக் கட்சிக்கு எதிராக பேசுகிறேன். அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள்?” என்றும், பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

“நீங்கள் எங்களுக்கு என்ன செய்தீர்கள்? எங்கள் தலைவர் இறந்த உடனே அவரை ஊருக்கு வெளியில் அடக்கம் பண்ணுவது தான் உங்க திட்டமா?” என்று, கேள்வி எழுப்பிய பா.ரஞ்சித், “எங்கள் தலைவருக்கு சென்னைக்குள் மணிமண்டபம் கட்ட வேண்டும்” என்றும், கோரிக்கை விடுத்தார்.

“சமூக நீதியை பின்பற்றும் திமுகவிற்கு ஒரு வேண்டுகோள். ஆம்ஸ்ட்ராங்கிற்கு சென்னையில் மணி மண்டபம் கட்ட திமுக அரசின் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், திமுக, அதிமுக அனைத்து கட்சிகளுமே எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை அளிக்கவில்லை என்றும், எங்களுக்காக ஒழிக்க ரிசர்வேஷன் மூலம் எம்பி, எம்எல்ஏக்கள் ஆனவர்கள் எங்கள் பிரச்சனையை ஒரு போதும் கேட்கவில்லை என்றும், அவர்களை பதவியில் இருந்து நீக்குங்கள்” என்றும், ஆவேசமாக பேசினார்.

குறிப்பாக, “மற்ற ஜாதி பிரச்சினைகளையும் தலித் ஜாதி பிரச்சனைகளையும் வேறு வேறு, இரண்டையும் ஒன்றாக அணுகாதீர்கள் என்றும், உயர்சாதி அடக்கு முறையும் எஸ்சி, எஸ்டி அடக்கு முறையும் வேறு வேறு என்றும், ம்ஸ்ட்ராங்குக்கு பிறகு தலித் மக்களின் கோரிக்கைகளை பிரச்சனைகளை நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுக்கும்” என்றும், இயக்குனர் பா. ரஞ்சித் ஆவேசம் பொங்க பேச்சினார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *