8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம், உறவுக்கார இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிரடியாக அவர் மீது போக்ஸோ வழக்கு பாய்ந்தது..
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தான் இப்படியான அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
நாட்றம்பள்ளி அடுத்த புள்ளாநேரி பகுதியில் வசிப்பவர் மணி என்பவரது மகன் 35 வயதான தமிழ்மணி, அதே பகுதியில் தன்னுடைய வீட்டின் எதிரே வசிக்கும் எட்டாம் வகுப்பு படித்து வரும் உறவுக்கார பெண்ணான 13 வயது சிறுமியை அழைத்து பேசுவது போல் பேசி, அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தை அந்த சிறுமி கூறிய நிலையில், இதனால், அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த சிறுமியின் தாயார், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தமிழ்மணி மீது புகார் அளித்தார்.
இது குறித்து, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதன் காரணமாக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உடல் நிலை குறித்து தகுதிச் சான்று பெற சென்ற இடத்தில் தமிழ் மணிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதன் காரணமாக, மருத்துவர்கள் தகுதி சான்று கொடுக்க மறுத்ததால், குற்றம் சாட்ட நபரை அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைக்க முடியாமல் போலீசார் தனது சொந்த ஜாமினில் வெளிய விட்டனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.