அம்பேத்கர் சிலைக்கு காவி வேட்டி, விபூதி மற்றும் குங்குமம் அணிவிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை ஏற்று, அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி, அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாள் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்த, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட 25 பேருக்கு அனுமதி வழங்கக் கோரி அருண் குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும் போது, யாருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப மாட்டோம் என்றும், அப்பேத்கரின் சிலைக்கு காவி வேட்டி, சத்தன திலகம், விபூதி மற்றும் குங்குமம் அணிய மாட்டோம் என்றும், போக்குவரத்துக்கு இடையூறு செய்ய மாட்டோம் என்றும், மனுதாரர் தரப்பில் உத்தரவாதம் அளித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த உத்தரவாதத்தை ஏற்ற நீதிபதி, அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோருக்கு அனுமதி அளித்த நீதிபதி, காவல் துறை அளிக்கும் வாகனத்தில் சென்று, அம்பேத்கர் பிறந்தநாள் நிகிழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று, அதிரடியாக உத்தரவிட்டார்.
அத்துடன், நீதிமன்றத்தின் இந்த உத்தரவாதம் மீறப்பட்டால் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும், நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.