Mon. Jun 30th, 2025

கர்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் மிகுந்த பயத்தையும் வருத்ததையும் ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்று கருச்சிதைவு (Miscarriage). ஏராளமான கனவுகளை சுமந்து கொண்டு வாழ்க்கையில் புதிய அத்தியாமாய் தாய்மையை அனுபவிக்க தயாராகும் பெண்களுக்கு இந்த வார்த்தையை கேட்கும்போதே ஒரு மாதிரியான பயம் ஏற்படும்.

கருச்சிதைவு என்பது கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்கள் அல்லது மாதங்களில் திடீரென நிகழும் பொதுவான மற்றும் மோசமான ஒரு நிகழ்வு. ஏனென்றால், கர்ப்பத்தின் முதல் மூன்று மாதம் வரை கருவானது நிலையானதாக இருக்காது; சில சமயங்களில் தானாகவே கலையும் வாய்ப்பும் அதிகம்.

இதனால் தான், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மூன்று அல்லது ஐந்து மாதங்கள் கழித்து உறவினர்களுக்கு தெரியப்படுத்துவார்கள். இப்படி கரு தானாகவே கலைந்து போகும்போது பெண்களுக்கு எந்த மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பதை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கருச்சிதைவுக்கான அறிகுறிகள் என்ன?

கரு கலையப்போகிறது என்பதை ஒரு சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம். எனவே, அந்த மாதிரியான சமயங்களில் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. தற்போது, கருச்சிதைவு ஏற்படக்கூடும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

➥ மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் இரத்தப் போக்கு
➥ முதுகு மற்றும் வயிற்றுப் பகுதியில் கடுமையான பிடிப்பு மற்றும் வலி
➥ இரத்தக் கட்டிகளுடன் கடுமையான இரத்தப் போக்கு
➥ திடீரென உடல் எடை தானாக குறைவது
➥ பிறப்புறுப்பின் வழியாக திசுக்கள் உறைந்து வெளயேறுவது
➥ பிறப்புறுப்பில் வெள்ளை அல்லது பிங்க் நிறத்தில் திரவம் வெளியேறுவது
➥ மார்பக பகுதியில் மென்மை, குமட்டல், வாந்தி போன்ற கர்ப்பக் காலத்தில் ஏற்படக்கூடிய அறிகுறிகள் இல்லாமல் போவது

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *