நடிகர் தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை படப்பிடிப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷ் Mood out- ல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆண்டிப்பட்டியில் நடிகர் தனுஷின் இட்லி கடை படப்பிடிப்பிற்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு, தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் “இட்லி கடை” படத்தில் நித்யா மேனன் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பானர், ஆண்டிப்பட்டி அருகே உள்ள அனுப்பப்பட்டு கிராமத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த கிராமத்தில், ஒரு தெரு போன்ற செட்டில்… கடை மற்றும் வீடுகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அத்துடன், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் தான், ஏற்கனவே அனுப்பப்பட்டு கிராமத்தில் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த செட், பிரிக்கப்படாமல் அப்படியே இருந்து உள்ளது.
தற்போது, அந்த செட்டில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்தவும், திட்டமிட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில், அனுப்பப்பட்ட கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மரம் மற்றும் பிளைவுட்டால் ஆன அந்த செட்டில் பற்றிய தீ மளமளவென பரவியது. இந்த விபத்து குறித்து, அப்பகுதி மக்கள் ஆண்டிப்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.
தீ விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் காற்று பலமாக வீசிய காரணமாக, படப்பிடிப்பு நடந்த செட் முழுவதும் எரிந்து முற்றுலாமாக சேதமானது. முக்கியமாக, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆண்டிப்பட்டி காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்தும், ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, நடிகர் தனுஷ் இயக்கம் இட்லி கடை படத்திற்கு அமைக்கப்பட்டிருந்த செட் தீ பற்றி எரிந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கும் வகையில், நடிகர் தனுஷ் Mood out- ல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.