இரண்டரை வயது குழந்தைக்கு அங்கன்வாடி ஊழியரான ஆயா, சூடு வைத்த வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி. கூலித் தொழிலாளி இவரது மனைவி சினேகா, இவர்களுக்கு தர்ஷிகா ஸ்ரீ என்ற, இரண்டரை வயது குழந்தை உள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள அங்கன் வாடியில் தர்ஷிகா உட்பட 13 குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு பாப்பாத்தி என்பவர் ஆசிரியராகவும், சுராக்காய்பட்டியை சேர்ந்த செல்லம்மாள், ஆயாவாகாவும் வேலை பார்த்து வருகின்றனர்.
தினந்தோறும் தனது அம்மா சினேகாவுடன் பள்ளிக்கு சென்று விட்டு திரும்புவது வழக்கமாக கொண்டனர்.
இந்நிலையில், செவ்வாய் அன்று அங்கன்வாடி சென்று திரும்பிய தர்ஷிகா ஸ்ரீ சோகமாக காணப்பட்டதால் பெற்றோர் என்ன என்று விசாரித்ததில் ஆயாம்மா கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததாக கூறியதையடுத்து, பெற்றோர்கள் ஆயாம்மாவிடம் கேட்டதற்கு, “சொல்வதை கேட்கவில்லை என்றால் அப்படித் தான் சூடு வைப்பேன்” என்று, அவர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர், கன்னிவாடி போலீசில் புகார் அளித்தனர்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே, பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.