Mon. Jun 30th, 2025

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கு.. விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்களா?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கா சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான விசாரணையை போலீசார் முடுக்கி விட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தான், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வதாகவும்,

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், மீடியா குறித்து எந்த உத்தரவும் இல்லை” என்று, சுட்டிக்காட்டினார்.

முக்கியமாக, “செய்தியாளர்களும் தனிப்பட்ட விவரங்களை கேட்டு துன்புறுத்துவதாகவும் இது குறித்து தாங்கள் தலையிட வேண்டும்” என்றும், வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக” கூறினார்.

அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் சூரியபிரகாசம், “காவல் துறை ஆணையர் குறித்த கருத்துக்கள் தொடர்பாகத் தான் மேல் முறையீடுதான் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், ஆனால் பத்திரிகையாளர் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டதாகவும், அது பற்றி மட்டுமே நடத்தப்பட விசாரணை வேண்டும் என்றும்,

முதல் தகவல் அறிக்கை பொதுத் தளத்துக்கு வந்து பிறகு அது யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்” என்றும், கூறினார்.

தொடர்ந்து, “ஏற்கனவே தான் பிறப்பித்த உத்தரவின் படி தான் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும், அவர்தெளிவுபடுத்தினார். “காவல் துறை எல்லை மீறினால், இது தொடர்பாக ஏதாவது மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றால், உச்ச நீதிமன்றத்தில் அணுகுமாறும்” நீதிபதி குறிப்பிட்டார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *