Mon. Jun 30th, 2025

கிணற்றில் விழுந்த குட்டி யானை.. வனத்துறையினரோடு சண்டையிட்டு தாய்யானை..!

கிணற்றில் விழுந்த குட்டியானையை மீட்ட வனத்துறையினர்: ஆத்திரத்தில் தாய் யானை வனத்துறையினரின் வாகனத்தை தாக்கும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவடத்திலுள்ள பெரும்பாவூர் மெய்க்கபாலா பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் தனியார் ரப்பர் தோட்டத்தில் உள்ள பயன்படுத்தப்படாத கிணறு ஒன்று உள்ளது அதில் யானைக்கூட்டத்திலிருந்து வந்த ஒரு குட்டி யானை தவறி விழுந்தது.

இதனால் குட்டியை காப்பாற்ற தாய் யானை மற்றும் பெரிய யானைகள் கூட்டமாக கிணற்றை சுற்றி வருவதை பார்த்த அப்பகுதி மக்கள்  உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா,  யானைகள் கூட்டம் கிணற்றைச் சுற்றி நின்றதால் வனத்துறை அதிகாரிகளால் அந்தப் பகுதிக்கு வர முடியவில்லை.

இதற்கிடையில், கோபமடைந்த தாய் யானை மரங்களை அசைத்து வனத்துறையினரின் வாகனங்களை நோக்கித் திரும்பியது. வனத்துறையினரின் ஜீப்பை தாக்கி கவிழ்க்க முயன்றது. மேலும் அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் பைக்கை அடித்து நொறுக்கியது. வனத்துறையினர் காட்டு யானைகளின் கூட்டத்தை விரட்டிய பிறகு, வனத்துறையினரும் அப்பகுதியினரும் சேர்ந்து கிணற்றின் கரையை உடைத்து குட்டி யானையை மீட்டனர் பின் குட்டியானை காட்டுயானை கூட்டத்துடன் சேர்ந்தது இந்த காட்சி கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *