Mon. Jun 30th, 2025

ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. வீண் ஓட்டுநர் மீது போக்சோ..

6 வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் வேன் ஓட்டுனர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தப்பி ஓடியவரை தேடுகிறது காவல் துறை. இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோயம்பேட்டை சேர்ந்த சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதற்காக, தனியார் வேன் மூலம் அவரது பெற்றோர் அனுப்பி வைத்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனியார் வேன் ஓட்டுநர் வினோத் என்பவர் பணியில் சேர்ந்து சிறுமியை வீட்டில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீட்டிற்கும் கொண்டு வந்து விட்டு உள்ளார்.

சிறுமிக்கு தனியார் வேன் ஓட்டுனர் வினோத் என்பவர், அடிக்கடி சாக்லேட் வாங்கி கொடுத்தும், ‘ஐ லவ் யூ’ என கூறியும் அவரது செல்போனுக்கு இரவில் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ் அனுப்பியும் வந்ததாகவும், கடந்த மாதம் 19 ஆம் தேதி சிறமி வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவரங்களை சிறுமி நேற்று முன்தினம் தனது வீட்டில் கூறியுள்ளார். இதனையடுத்து, கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசாரிடம் சிறுமியின் தாயார் புகாரே அளித்தார்.

போலீசார்

போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தனியார் வேன் ஓட்டுநர் வினோத் என்பவரை தேடி வருகின்றனர்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *