சினிமா பாணியில், ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நண்பர் வீட்டிற்கு அழைத்து சினிமா சவுண்ட் என்ஜினியரிடம் பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு கை வரிசை காட்டியை சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் தட்டி தூக்கி உள்ளனர்.
சென்னை கே.கே நகரில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சென்னை கேகே நகர் ராஜமன்னார் சாலை பகுதியைச் சேர்ந்த ஒரு திருமணமாகாத இளைஞர் சினிமா துறையில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர், Grindrடேட்டிங் ஆப் மூலமாக சுரேஷிற்கு ஆண் நபர் ஒருவர் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, கடந்த 15 ஆம் தேதி சவுண்ட் என்ஜினியரை பார்க்க வேண்டும் என அந்த நபர், வடபழனி கோயில் பின்புறம் அழைத்து உள்ளார்.
குறிப்பிட்ட அவரது வீட்டிற்கு சென்றதும், அங்கு பதுங்கி இருந்த 2 பெண்கள் உட்பட 7 பேர் சுரேஷை மிரட்டி கட்டி போட்டு உள்ளனர். மேலும், கடந்த 2 நாட்களாக மிரட்டி கடுமையாக தாக்கிய அந்த கும்பல், G pay மூலமாக 27 ஆயிரம் பணம், இரு சக்கர வாகனம் மற்றும் செல்போன் என அனைத்தையும் பறித்து உள்ளனர்.
அத்துடன், சவுண்ட் என்ஜினிமரை அரை நிர்வணமாக புகைப்படம் எடுத்துக்கொண்டு, “இந்த விசயத்தை வெளியில் சொன்னால், உனது போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம்” என்று, மிரட்டி அனுப்பி உள்ளனர்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த நபர், இந்த சம்பவம் தொடர்பாக நீண்ட நாட்களாக புகார் அளிக்காமல் இருந்த நிலையில், இதே போன்ற ஒரு சம்பவம் தொடர்பாக வேறொரு வழக்கில் வடபழனி போலீசார் சிலரை கைது செய்ததை சவுண்ட் என்ஜினியர் அறிந்திருந்தார். இதனையடுத்து, அவர் கடந்த 24 ஆம் தேதி வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மாதவன், இம்ரான், பரத் குமார், ஒரு 17 வயது சிறுவன் என 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாதவன் மீது ஏற்கனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயுத தடை சட்டப்பிரிவு வழக்கு நிலுவையில், இருப்பதும் இம்ரான் மீது போக்சோ வழக்கு உள்ளிட்ட மூன்று வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்து உள்ளது.
குறிப்பாக, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் ஷாம், இம்மானுவேல், தமீம் அன்சாரி, தஜ்ஜுதின் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதே போல, இந்த கும்பல் எத்தனை பேரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றும், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.