“அதிமுகவுக்கு இருந்த தைரியம் திமுகவிற்கு இல்லை” என்று, அதிமுக எம்.பி தம்பிதுரை காட்டமாக பேசியுள்ளார்.
தமிழக மக்களின் உரிமை காப்பதற்காக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தைரியமாக குரல் கொடுத்து கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியது அதிமுக. ஆனால், அந்த தைரியம் திமுகவிற்கு இருந்ததா?
ஜோலார்பேட்டையில் நடைபெற்ற அதிமுக கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், எம்.பி.யுமான மு. தம்பிதுரை பேசியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஆர் எஸ் மஹாலில் அதிமுக சார்பில் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே சி வீரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் கழக கொள்கை பரப்புச் செயலாளரும், எம்பியுமான மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி, அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திமுகவில் இருந்து விலகி நிர்வாகிகள் பலர் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த நாட்றம்பள்ளி பேரூராட்சி கழக நகர செயலாளர் மகேந்திரன் மறைவிற்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்திவிட்டு பின் பேசிய முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி, வேலூரில் நடந்து முடிந்த இளைஞர் பாசறை மண்டல மாநாடு தமிழகத்திற்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது பொதுச்செயலாளர் பாராட்டுக்கூடிய மாநாடாக அமைந்தது அதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
மக்களோடு இணைந்து பணிவுடன் ஒற்றுமையுடன் இணக்கமாக செயல்பட்டால் வரும் 2026 ல் வெற்றி பெற்று மீண்டும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி புரட்சி தமிழர் எடப்பாடியார் தலைமையில் அமைவதை யாராலும் தடுக்க முடியாது.
மேலும், கடந்த தேர்தலில் திமுகவினர் அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் திமுகவை ஆட்சியில் அமர்த்தினார்களே தவிர அவர்களின் சாதனையோ அல்லது மக்களுக்கான சேவைக்காக அல்ல எனவும்,
இன்றைக்கு அவர்களின் வேஷம் கலைந்து விட்டது மக்கள் உணர்ந்துள்ளனர் விரைவில் திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எரிவார்கள் என ஆவேசமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய கழக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை,
புரட்சித் தமிழர் எடப்பாடியார் சாதாரண கிளைக் கழக செயலாளராக இருந்து கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி புரட்சித்தலைவர் உருவாக்கிய அம்மா அவர்கள் கட்டிக் காப்பாற்றிய இந்த இயக்கம் அழிந்து விடக்கூடாது விழுந்து விடக்கூடாது என்பதற்காக அயராமல் கழகத்திற்காக உழைத்துக் கொண்டிருப்பவர் சாதாரண விவசாயி எனவும் மீண்டும் ஆட்சி நாயகனாக தமிழகத்தில் தமிழக மக்கள் பேசக்கூடிய தலைவராக விளங்கி கொண்டிருப்பவர் எடப்பாடியார் என புகழாரம் சூட்டிய அவர், வருகின்ற 2026 ல் தமிழகத்தில் 234 தொகுதிகளில் வெற்றி பெற்று கழக பொதுச் செயலாளர் தலைமையில் மீண்டும் அதிமுக அமைக்கும் என தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தொகுதி மறு சீராய்வு, நீட் தேர்வு, மும்மொழி கொள்கை ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட திமுக தற்போது மதுபான ஊழலை மறைப்பதற்காக மக்கள் மத்தியில் தொகுதி மறு சீர் ஆய்வுக்காக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மத்தியில் நாடகம் ஆடுகிறது எனவும், இதற்காக முதல்வர் சிறைக்குச் செல்வது உறுதி என தெரிவித்தார். இவ்வாறு இவர்கள் பேசிய பேசு அரசியல் வட்டரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.