நிச்சயதார்த்தம் முடிந்தும் கல்யாணம் நடப்பது தாமதமாகி கொண்டே இருந்ததால், இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பேரூராட்சி புது தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மகள் (22) சத்யபிரியா என்பவருக்கு சுவாமிமலை அருகே திம்மங்குடி பகுதியை சேர்ந்த ராஜ் என்பவரது மகன் (26) விஜய்க்கும் கடந்தாண்டு மே மாதம் 19 ந் – தேதி வேப்பத்தூர் கல்வெட்டு மாரியம்மன் கோவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இத்த நிலையில் கடந்த 11 மாதத்திற்கு மேலாக நிச்சயதார்த்தம் செய்த பெண்ணை திருமணம் செய்யாமல் மாப்பிள்ளை விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் காலம் தாழ்த்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த கோவிந்தராஜ் மகள் சத்யகிரியா கடந்த 16-ந் தேதி காலை வீட்டின் அறையில் தூக்கிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார் இதனைக் கண்ட உறவினர்கள் அவரை தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி சத்திய பிரியா உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அன்று மாலை இறந்த பெண்ணின் உடலை உறவினர்கள் இறுதி சடங்கை முடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த சத்யபிரியாவின் தந்தை கோவிந்தராஜ் நிச்சயதார்த்த செய்த மாப்பிள்ளை விஜய் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தனது பெண்ணை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்த நிச்சயம் செய்த மாப்பிள்ளை விஜய் மற்றும் அவரது குடும்பத்தார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரி அடிப்படையில் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.