மருமகன் தனது மகளை தொடர்ந்து சித்திரவதை செய்து கொண்டே இருந்ததால், ஆத்திரமாத்திரமடைந்த மாமனார், மருமகனை கல்லால் அடித்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம் புத்தூரில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம் புத்தூர் கீரை தோட்டம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான மாடசாமிக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த சூழலில், மாடசாமி அப்பகுதியில் சித்தாள் வேலை செய்து வந்து உள்ளார். இந்த நிலையில் தான், மாடசாமிக்கு குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மாடசாமி தனது மனைவியிடம் மட்டன் குழம்பு கேட்டு சண்டை போட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மட்டன் குழம்பு சண்டையை, அருகில் வசித்து வரும் மாமனாரான 50 வயதான சரவண குமார், அவரது மூத்த மருமகன் 25 வயதான ஆதிலிங்கம் ஆகியோர் சத்தம் போட்டு, மாடசாமியை கண்டித்து உள்ளனர்.
இதனால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, நேற்று இரவு மாடசாமி, மீண்டும் குடித்து விட்டு வந்து தனது மனைவி சங்கீதாவை அடித்து உள்ளார்.
இதனைப் பார்த்த, மாமனார் சரவண குமார் மற்றும் ஆதிலிங்கம் ஆகியோர் சத்தம் போட்டு உள்ளார். இதனால், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், மாமனார் சரவணகுமார் கடும் ஆத்திரமடைந்த நிலையில், “மகளை கல்யாணம் பண்ணி கொடுத்தா.. அடிப்பியா?” என்று கேட்டுக்கொண்டே, அருகில் கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து, மருமகன் என்று கூட பார்க்காமல், மாடசாமியை முகத்தில் அடித்து உள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் காயமடைந்தார். இதனை அடுத்து, அருகில் இருந்தவர்கள் மாடசாமியை மீட்டு, ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர்.
ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “மாடசாமி ஏற்கனவே இறந்து ட்டதாக” தெரிவித்து உள்ளனர்.
அத்துடன், இந்த கொலை சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து வந்த புதிய புதியம் புத்தூர் போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து சரவண குமார் மற்றும், ஆதிலிங்கம் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.