சட்ட விரோதமாக வீட்டில் நாட்டு வெடிகுண்டு மற்றும் பட்டாசு வைத்திருந்த பட்டாசு கடை உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
வாணியம்பாடி அருகே சட்ட விரோதமாக வீட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிக்குண்டு, வெடித்து சிதறியதில் துண்டான இளைஞரின் கையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் என்பவர் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசுகள் விற்பனை செய்துவரும் நிலையில், ஐயப்பனின் உறவினரான சபரி என்பவர் ஈச்சங்கல் பகுதியில் உள்ள தனது வீட்டில், நாட்டு வெடிகுண்டு மற்றும், பட்டாசுகளை தயாரித்து, அதனை ஐயப்பனிடம் அளித்து வந்துள்ளார், இந்நிலையில் நேற்று, இரவு சபரி தனது வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டை தயாரித்து வந்தபோது திடீரென நாட்டு வெடிக்குண்டு வெடித்து சிதறியுள்ளது, இதில் சபரியின் இடது கை பாதி சிதறி உடல் முழுவதும், பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
உடனடியாக, சபரியை மீட்ட அப்பகுதி மக்கள், அவரை சிகிச்சையிற்காக வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவருக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள், சபரியை மேல் சிகிச்சையிற்காக, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வந்த நிலையில், சட்ட விரோதமாக வீட்டில் நாட்டு வெடிகுண்டு மற்றும் பட்டாசுகளை தயார் செய்த ஐயப்பனை இன்று அம்பலூர் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
அத்துடன், ஈச்சங்கால் பகுதியில் ஏற்கனவே கடந்த நவம்பர் 29 ஆம் தேதி ஐயப்பன் என்பவர் நடத்தி வந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 5 வீடுகள் சேதமடைந்த நிலையில், தற்போது மீண்டும் அதே பகுதியில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு, வெடித்து சிதறியதில் இளைஞர் கை துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.