Mon. Jun 30th, 2025

தூத்துக்குடியில் மிதக்கும் உணவகம்!

பாண்டிச்சேரியில் இருப்பது போலவே தூத்துக்குடியில் மிதக்கும் உணவகம் விரைவில் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பீச் ரோட்டில் கேரளா, பாண்டிச்சேரியில் இருப்பது போல மிதக்கும் உணவகம் மாநகராட்சி சார்பில் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக தூத்துக்குடி கிழக்கு மண்டல குறைதீர்க்கும் முகாமில் மேயா் ஜெகன் பொியசாமி கூறினார்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஓவ்வொரு வாரமும் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மண்டல கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் மதுபாலன் ஆகியோரும் கழத்து கொண்டனா.

தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட பின் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில், தமிழக முதல்வர் உத்தரவைக் இணங்க தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 10 மாதங்களாக வழங்கப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுவதாக தெரிவித்த அவர், இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறினார். மற்றும் மாநகராட்சியில் சாலை வசதிகள் கேட்டு விண்ணப்பித்த அனைத்து மனுக்களுக்கும் மே மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும், தூத்துக்குடி மாநகராட்சியில் 1100 தெரு விளக்குகள் போட இடம் கண்டறியப்பட்டுள்ளது. என்றும் அப்பகுதியில் தெருவிளக்குகள் விரைவில் போடப்படும் என்றும் கூறினார்.

கிழக்கு மண்டலத்தில் உள்ள முத்து நகர் பீச்க்கு சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் 2000 முதல் 3000 பேர் வருகின்றனர். இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, அப்பகுதியில் ஒரு பகுதியில் மட்டும் நடை பயிற்சி செய்வதற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் மறுபகுதியிலும் நடைபயிற்சி செய்வதற்கு விரைவில் நடைபாதை அமைக்கப்படும் என்றும் கூறினார்.

ஏற்கனவே அமைக்கப்பட்ட படகு குழாம் பகுதியில் பாண்டிச்சேரி, கேரளாவில் தண்ணீரில் மிதக்கும் உணவகம் உள்ளது போன்று தூத்துக்குடி பீச் ரோடு படகு குழாம் பகுதியில் மாநகராட்சி சார்பில் மிதக்கும் உணவகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். மேயர் ஜெகன் பொியசாமி கூறிய இத்திட்டம் மக்களிடத்தில் பெரும் வரவேற்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *