அதிமுக பாஜக கூட்டணி குறித்து விமர்சிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எமர்ஜென்சி காலகட்டத்தில் கலைஞர் அவர்களே காங்கிரஸ் கட்சியினுடைய செயல்பாடுகளை பார்த்து அவர்கள் திமுகவுக்கு கொடுத்த சங்கட்டங்களை வேதனைகளை நினைத்து கூட நட்பு கேடாய் முடியும் என்று சொன்னதெல்லாம் நினைவுக்கு கொண்டுவர விரும்புகிறேன் – மதுரையில் ஜி.கே. வாசன் பேட்டி அளித்தார்.
அனைத்து மதங்களும் சம்மதமே என்ற விதியில் தான் தமிழக அரசு செயல்பட வேண்டும் அமைச்சர் பொன்முடி ஒரு மதத்தைப் பற்றி அருவருக்கத்தக்க முகம் சுளிக்கும் வகையில் பேசியது தமிழகத்திற்கு அவமானம் கட்சி பதவியில் இருந்து எடுத்தால் போதாது அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் ஜி கே வாசன் பேட்டி அளித்தார்.
“அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாக தொடங்கியதில் திமுக கூட்டனிக்கு தேர்தல் தோல்வி ஜுரம் ஏற்பட்டு விட்டது” என்று ஜி கே வாசன் விமர்சனம் செய்துள்ளார்.
“லட்சக்கணக்கான ஏழ்மையில் இருக்கின்ற இஸ்லாமியமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் உயர வேண்டும் என்பதற்காக தான் வாக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தேன்” என்று,- ஜி கே வாசன் திமுகவை விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை மண்டல தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க மையத்தில் வைத்து நடைபெற்றது இதில் ஏராளமான தமக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் ஜி கே வாசன் சந்திரிகாளர்களை சந்தித்து கூறுகையில்,
அனைத்து மதங்களும் சம்மதமே என்ற வீதியில் தான் தமிழக அரசும் அனைத்து கட்சிகளும் முக்கியமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்பது விதி.
ஆனால், துரதிஷ்டவசமாக திமுகவின் உடைய ஒரு முக்கிய தலைவரும் அமைச்சருமான பொன்முடி இன்றைக்கும் பதவியில் இருக்கின்ற ஒரு அமைச்சர். ஒரு மதத்தைப் பற்றி ஒரு கீழ் தனமான அறுவருக்கதக்க முகம் சுளிக்கும் வகையில் பேசியது தமிழகத்திற்கு அவமானம்.
கட்சிப் பதவியில் இருந்து எடுத்தால் போதாது. அமைச்சர் பொறுப்பில் இருந்து உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் திமுக அரசும் அதை சார்ந்த தலைவரும் அவரை ஆதரிப்பதாக அர்த்தம்.
அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது NDA கூட்டணி இந்தியாவில் மீண்டும் வலுவாக உருவாகத் தொடங்கி இருக்கிறது அதனுடைய அதிகார பூர்வமான அறிவிப்பு நேற்று உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வந்தது அதிமுகவின் பொதுச் செயலாளர் நேரடியாக இரண்டு பேரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்திய பிறகு திமுகவிற்கு அதன் கூட்டனி தேர்தல் தோல்வி ஜுரம் ஏற்பட்டது.
தோல்வி அடிப்படையில் தான் கண்மூடித்தனமாக பேசி உள்ளார்கள்
அதிமுக பாஜக கூட்டணி என்பது நேச்சுரல்ஸ் அலையன்ஸ்.
இந்த கூட்டணி ஏற்கனவே இருந்த கூட்டணி வென்ற கூட்டணி மீண்டும் தமிழகத்தினுடைய அவசர தேவைக்காக சேர்ந்திருக்கிறது.
திமுக அரசை அகற்றுவதற்காகவும் மக்கள் மீது சுமையை தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருக்கின்ற திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிய திமுக கட்சியை அகற்றுவதற்காக அதிமுக பாஜக இந்த கூட்டணி தமிழகத்தில் மீண்டும் அமைந்திருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சரை சென்னையில் இருக்கும்போது நான் நேரடியாக சந்தித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அடித்தளமாக மற்றும் கூட்டணியை பலப்படுத்தக்கூடிய நிலவரம் குறித்து கூட்டணி தலைவர் முறையில் நான் அவர்களிடம் பேசினேன் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை வலுவானவலுவான கூட்டணியாக இருக்கும்.
வக்பு வாரிய சட்டத்திற்கு அந்த மசோதாவை ஓருவரி விடாமல் படித்து விட்டு தான் ஆதரிக்கிறேன் என்றால் அந்த மசோதாவில் மீது ஏழை எளிய நடுத்தர இஸ்லாமிய மக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் ஏழ்மையில் இருக்கின்றர், இஸ்லாமிய குடும்பங்களுக்கு படிப்பாக இருக்கட்டும் சுகாதாரமாக இருக்கட்டும் வரும் காளங்களில் வாழ்வாதாரமாக இருக்கட்டும் அது சிறக்க வேண்டும் உயர வேண்டும் வளர வேண்டும் என்பதற்காக புதிய கோட்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்து கோட்பாட்டு அடிப்படையில் பல வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தி மசோதா என்பதால் அந்த மசோதாவை நியாயமாக விடுபட்டவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்ள்.
மசோதாவின் அடிப்படையில் வாக்பு வாரிய சொத்தின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களுக்கு உதவிகள் நடந்து கொண்டிருக்கிறது லட்சம் கணக்கான இஸ்லாமியர்களுக்கு உதவிகள் நடைபெற வேண்டும் கோட்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது இதுனால் தான் தமிழ் மாநில காங்கிரஸ் வாக்கை நான் அளித்திருக்கின்றேன்.
பாஜகவும் அதிமுகவும் கூட்டணி ஒத்த கருத்து உடை கூட்டனி எங்களுக்குள் கருத்து வேறுபாடு கிடையாது ,
தமிழக மக்கள் எதிர்பார்த்த கூட்டணி தொடங்கிவிட்டது இனிமேல் ஒத்த கருத்துடைய கட்சி எல்லாம் இங்கு வரலாம்.
தமிழகத்தில் NDA கூட்டணி இந்தியாவில் தமிழகத்தின் அதிமுக தலைமையான கூட்டணி வெற்றி அணியாக தமிழகத்தில் வளம் வரும்.
திமுக ஒரு மதத்தை தவறாக சித்தரித்துஅரசியல் செய்யும் கூட்டணி கூட்டணி, 140 கோடி மக்களுக்கு மத்திய அரசு மோடி தலைமையில் நல்லது செய்து கொண்டிருக்கிறது.
பாஜக அதிமுக கூட்டணிக்கு ஒத்த கருத்து உள்ள வருபவர்களுக்கு கதவு திறந்தே இருக்கும்.
எமர்ஜென்சி களத்தை விட திமுகவின் நிலை ஒரு மோசமான காலம் எதுவும் கிடையாது திமுக என்றால் காங்கிரசுக்கு சிம்ம சொப்பனம் அவர்களுக்கு எமர்ஜென்சி காலத்தில் மரியாதை கொடுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
திமுக காங்கிரஸ் கூட்டணியை விட வேறு உதாரணம் தமிழகத்தில் சொல்லவே முடியாது, மறைந்த தலைவர் கலைஞர் அவர்களே ஒரு கட்டத்திலே காங்கிரஸ் கட்சியினுடைய செயல்பாடுகளை பார்த்து அவர்கள் திமுகவுக்கு கொடுத்த சங்கட்டங்களை வேதனைகளை நினைத்து கூட நட்பு கேடாய் முடியும் என்று சொன்னதெல்லாம் நினைவுக்கு வர விரும்புகிறேன்.
மறைந்த தலைவர்களைப் பற்றி கொச்சைப்படுத்துவது நம்முடைய கலாச்சாரம் அள்ள அதை பற்றி பேச வேண்டும் என்றால் பல கட்சி தலைவர்களைப் பற்றி அடுக்கடுக்காக பேசலாம்.
நீதிமன்றத்திற்கு போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் நீதிமன்றம் என்ன சொன்னது என்று தெரியும்.
தமிழகத்தினுடைய சட்டம் ஒழுங்கு கொலை கொள்ளை திருட்டு செயின் பறிப்பு போதைப்பொருள் பாலியல் என அடுக்கிக் கொண்டே போகலாம் இதை வளர விட்டு அடக்க முடியாமல் தடுக்க முடியாமல் விடுவிக்க முடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற அரசாக இந்த அரசு செயல்படுவது வேதனைக்குரியது வருத்தத்துக்குரியது தமிழகத்திற்கு தலைகுனிவு.
தினந்தோறும் கஞ்சா மாணவர்கள் அட்டகாசம் செய்து பெற்றோர்களுக்கு மன வேதனை அளிக்கிறது.
இனிமேல் இதை கட்டுப்படுத்த முடியுமா முடியாதா என்றால் முடியாது என்ற நிலைக்கு பொதுமக்கள் வந்து விட்டார்கள்.
எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் தேர்தல் முறை ஜனநாயகப்படி நடைபெற வேண்டும் அதன் அடிப்படையில் வாக்காளர்கள் அரசின் மீது கோபத்தை தனது வாக்கின் மூலம் வெளிப்படுத்துவார்கள்.