Mon. Jun 30th, 2025

கிளாமர் காளி கொலை! கொன்றது வெள்ளைகாளியா? மதுரையில் என்ன நடக்கிறது?

மதுரையில் கிளாமர் காளி கொலை வழக்கில் பிரபல ரௌடி வெள்ளைகாளியின் தாயார் உட்பட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மதுரை மாவட்டம் தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி வீ.கே.குருசாமியின் உறவினரான கிளாமர் காளி (எ) காளிஸ்வரன், கொலை வழக்கில் பிரபல ரௌடியான வெள்ளைக்காளியின் தாயார் உட்பட 7 பேர் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இரண்டு குடும்பத்தின் பகைக்கு இதுவரை 22 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். ஆம், கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இது ஒரு ரத்த பகையின் கதை!

அதாவது, கிளாமர் காலி கொலை வழக்கில் குள்ள முத்து பாண்டி என்ற நபர் நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் சரண்டர் ஆனார். இந்த நிலையில், பிரபல ரௌடி வெள்ளைக்காளியின் தாயாரான ஜெயக்கொடி மற்றும் சிவகங்கை மாவட்டம் மணல்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன், மதுரை கல்மேடு நந்தகுமார், காமராஜபுரம் நவீன்குமார், சென்னையை சேர்ந்த கார்த்திக், திருப்பூரை சேர்ந்த அசன் ஆகிய 7 பேரை தனிப்படை காவல் துறையினர் தற்போது கொலை வழக்கில் முதற்கட்டமாக கைது செய்து உள்ளனர்.

இதில் கைது செய்ய முயன்ற போது, மணல்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ,தவறி கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அத்துடன், பிரபல ரௌடியான வெள்ளைக்காளி சிறையில் இருந்தபடி திட்டம் தீட்டி கிளாமர் காளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, வெள்ளைகாளியின் தாயார் ஜெயக்கொடி கூட்டு சதி திட்டமிட்டு கிளாமர் காளியை கொலை செய்தது விசாரணையில் தற்போது தெரிய வந்து உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் இன்னும் பலரும் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம், மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *