எல்லோருக்கும் பிடித்தவராக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம். ஆனால், அந்த தனித்தன்மையை பெறுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. இருப்பினும், உங்களிடம் இந்த பழக்கங்கள் இருந்தாலே உங்களை அனைவருக்கும் பிடித்த நபராக (Favorite Person) ஈஸியாக மாறிவிடலாம்.
சுயநலம் இருக்க கூடாது:
இந்த காலத்தில் சுயநலம் இல்லாத மனிதர்களை காண்பது அரிதிலும் அரிது. இருந்தாலும், நீங்க சுயநலம் அற்றவராக இருக்க முயற்சி செய்யுங்கள். மற்றவர்களுடைய கஷ்ட காலத்தில் உதவி செய்வது; பிறர் மகிழ்ச்சியாக இருக்க தேவையான சின்ன விஷயங்களை செய்வது. இந்த தன்னலம் இல்லாத தன்மையே உங்களை மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டும்.
உண்மையை பேசு:
விஷயம் சிறியதோ அல்லது பெரியதோ எதுவாக இருந்தாலும் உண்மையை மட்டும் பேசுங்கள். இங்கு பலருக்கும் உண்மையை பேசுபவர்களை தான் பிடிக்கும். அதுவே உங்களின் மீதான நம்பிக்கை மற்றும் மதிப்பை அதிகரிக்க செய்யும்.
மன்னித்து பழகு:
அனைவருக்கும் பிரச்சனை இருக்கும்; சில தவறுகளை செய்வது இயல்பு தான். எனவே, தவறு செய்தால் மன்னித்து பழகு. அதுவே, அவர்கள் திருந்துவதற்கு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு. அதுமட்டுமல்லாமல், மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னிக்கத் தெரிந்தவர்கள் உடல் மற்றும் மனம் ரீதியாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதுவும் மற்றவர்களை ஈர்க்கும் அற்புதமான கலை தான்.
எளிமையை ஏற்றுக்கொள்:
உங்களை பற்றி நீங்களே தற்பெருமை பேசும் இருக்கக் கூடாது. உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை மனதார ஏற்றுக்கொள்ள பழகிக் கொள்ளுங்கள். முக அழகை பெருமை, கௌரவம் என்று நினைக்கும் இந்த உலகில், உங்களுடைய குணம் அழகாக இருந்தால் போதும். அதுவே, உங்களை மற்றவர்களிடம் தனித்துக் காட்டும்.