Tue. Jul 1st, 2025

Half Yearly Exam Postponed: இன்று நடக்கவிருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.. பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று இரவு முதலே சென்னை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்தது. அதைத்தொடர்ந்து, இன்று தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, திருநெல்வேலி மாவட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை அறிவிப்பால் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும், 9 ஆம் வகுப்புகளுக்கு இன்று நடக்க இருந்த ஆங்கில தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *