Mon. Jun 30th, 2025

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் போது ஏற்படுவதே சர்க்கரை நோய். இந்த காலத்தில் வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் பொதுவான வியாதியாகவே சர்க்கரை நோய் மாறி வருகிறது. இதற்கு, குணப்படுத்தவே முடியாத இந்த நீரிழிவு நோயானது ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், கர்ப்பம், சினைப்பை நீர்க்கட்டிகள் போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது.

நீரிழிவு நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்துவிட்டால், அதை கட்டுக்குள் வைத்திருக்க முடியுமே தவிர முழுமையாக குணப்படுத்த முடியாது. வாழ்நாள் முழுவதும் இதற்கு மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதேசமயம் வயது மற்றும் மரபணு போன்ற காரணிகளால் ஏற்படும் நீரிழிவு பாதிப்பை நம்மால் மாற்ற முடியாவிட்டாலும், பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி வருவதன் மூலம் இளம் வயதிலேயே வரக்கூடிய சர்க்கரை நோயை கொஞ்ச நாளுக்கு தள்ளிப்போட முடியும்.

உணவு கட்டுப்பாடு

மாவுச்சத்து, கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும் உணவுகளை சாப்பிடுவதை முடிந்த வரை குறைத்துக் கொள்ளுங்கள். அதேபோல், எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளை முடிந்த வரை தொட்டுக்கூட பார்க்க வேண்டாம். இனிப்பு சாப்பிடலாம் ஆனால் அளவோடு சாப்பிட கற்றுக்கொள்ளுங்கள். வெள்ளைச் சர்க்கரையை அதிகம் பயனபடுத்த வேண்டாம்.

நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்து உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் எதுவும் இருக்காது. குடலும் ஆரோக்கியமாக இருக்கும். இதனால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும். அதுமட்டுமல்லாமல், நார்ச்சத்து உணவுகள் நமது உடலில் இன்சுலின் எதிர்ப்பு உணர்திறனை (Insulin resistance) மேம்படுத்தவும் உதவுகிறது.

மன அழுத்தம்

இன்றைக்கு பாதி பேருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு மன அழுத்தம் முக்கியமான காரணமாக இருக்கிறது. பொதுவாக இந்த மனஅழுத்தம் அதிகப்படியான கோபம், பதட்டம், பயம் மற்றும் கவலை ஆகியவற்றால் தான் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தத்தை குறைக்க வில்லை என்றால், ஏற்கனவே நீரிழிவு நோய் இருந்தால் மேலும் அதிகப்படுத்தி விடும். அது உயிருக்கே உளை வைக்கும் அளவுக்கு கொண்டு சென்று விடும். எனவே, முடிந்தவரை மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முயற்சி பண்ணுங்க.

உடல் எடை

உடல் எடை தான் நமது உடலில் ஏற்படும் ஆபத்தான நோய்களுக்கும் முக்கிய மற்றும் முதல் காரணமே. எனவே, உங்களுடைய உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரியுங்கள். ஒருவேளை எடை அதிகமாக இருந்தால் எவ்வளவு சீக்கிரம் குறைக்க முடியுமோ குறைத்துவிடுங்கள்.

உடற்பயிற்சி

இங்கு பலருக்கும் உட்கார்ந்த வாழ்க்கை முறையில் வாழ்க்கையே ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்தால், உடல் உறுப்புகளுக்கும், தசைகளுக்கும் வேலை என்பதே இல்லாமல் போய்விடுகிறது. இதன் விளைவு தான் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கட்டுகடங்காமல் அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு வழி வகுத்து கொடுக்கிறது. எனவே, தினமும் எளிமையான உடற்பயிற்சியாவது செய்யுங்கள். இல்லையெனில், தினமும் 30 லிருந்து 45 நிமிடங்கள் கைகளை வேகமாக வீசி நடைபயிற்சியாவது பண்ணுங்க.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *