Mon. Jun 30th, 2025

IPL2025: சென்னை அணியுடன் மோத சென்னை வந்த மும்பை இந்தியன்ஸ்!

IPL2025:சென்னை அணியுடன் பல பரீட்சை மேற்கொள்வதற்காக மும்பையில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியினரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

IPL2025:IPL 18 வது சீசன் துவங்க இருக்கும் நிலையில், முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி, மும்பையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அதாவது, வரும் 23 ஆம் தேதி அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் பல பரிட்சை மேற்கொள்ள உள்ளன.

அதாவது, இரண்டு அணிகளும் தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று இருக்கும் நிலையில், 6 வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் முதல் போட்டியில் பங்கேற்க இருப்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகப் பார்க்கப்படுகிறது.

போட்டியில் பங்கேற்பதற்காக ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, மும்பையில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. சென்னை விமான நிலையம் வந்தடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியினரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேர்த்தனர்.

ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதோவ், தீபக்சேகர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர். இவர்களுடன் அணியின் பயிற்சியாளரான ஜெயவர்த்தனே மலிங்கா முக்கிய போலர்களில் ஒருவரான, ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.

சூரியகுமார் யாதவ் மற்றும் ட்ரெண்ட் போல்ட், தீபக்சேகர் ஆகியோர் தனித்தனி வாகனங்களில் செல்வதற்காக வந்த போது, ரசிகர்கள் சூரியகுமார் யாதவ் சுற்றி வளைத்து அவருடன் செல்பி எடுப்பதற்கும், அவருடன் கையொப்பம் பெறுவதற்கும் ஆர்வம் காட்டனர். இதனை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி கார் மூலம் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் அனைவரும், கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர விடுதிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *