Mon. Jun 30th, 2025
IPL2025: சீசன் தொடங்குவதை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் நாட்களில் மட்டும், சென்னை மக்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
TATA IPL Season -2025 கிரிக்கெட் போட்டிகள்:
23.03.2025, 28.03.2025, 05.04.2025, 11.04.2025, 25.04.2025, 30.04.2025, 12.05.2025 ஆகிய நாட்களில் சென்னை M.A சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளன.
இப்போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு போட்டி நடைபெறும் நாட்களில் 17.00 மணி முதல் 23.00 மணி வரையிலும், பின்வருமாறு வாகன நிறுத்த ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:- 
வாகன நிறுத்தத்திற்கான அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள்:- 
வாகன அனுமதி அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
அனுமதி அட்டை வாங்காத வாகனங்கள் :- 
அ. போட்டியை காண சொந்த வாகனத்தில் வரும் நபர்கள் கதீட்ரல் சாலை மற்றும் R.K சாலை வழியாக காமராஐர் சாலை சென்று மெரினா கடற்கரை சாலை அடைந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, பின்னர் சுரங்கப்பாதைகள் பயன்படுத்தி நடைபயணமாக சென்று மைதானத்தை அடையலாம்.
ஆ. போட்டியை காண டாக்சிகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் போன்ற வணிக வாகனங்களில் வரும் நபர்களுக்கு அண்ணாசாலையிலிருந்து வாலாஜா சாலைக்குள் சென்று மைதானத்திற்கு அருகில் இறக்கிவிடப்பட்டு, மேலும் வாகனங்கள் சிவானந்தா சாலையில் நிறுத்த அனுமதிக்கப்படும்.
வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது.  அவ்வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலையில் மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்ல மற்றும் இறக்கிவிடுவதற்கு அனுமதிக்கப்படும்.
 பொதுமக்கள்  பிரஸ் கிளப் சாலை வழியாக சென்று கிரிக்கெட் மைதானத்தை அடையலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *