சியான் விக்ரமிடம் “இளமையின் ரகசியம் குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு, கழுதை பால் குடித்தால் இளைமையாக இருக்கலாம்” என கூறியது ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27 ம் தேதி வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ஈரோடு மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள சக்தி சினிமாஸ் திரையரங்கில் வீர தீர சூரன் திரைப்படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், நடிகர் சீயான் விக்ரம் மற்றும் இயக்குநர் அருண்குமார் ஆகியோர் திரையரங்கிற்கு வருகை தந்தனர்.
அப்போது, நடிகர் விக்ரம் இளைமை தோற்றம் குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, வயதாகுவது நல்லது தான் என்றும் வாரம் ஒருமுறை கழுதை பால் குடித்தால் இளையாக இருக்கலாம் என்று புன்னைகையுடன் கூறிய நடிகர் விக்ரம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வீர தீர சூரன் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, திரைப்படத்தை புதுமுயற்சியில் தயாரித்துள்ளதாக ரசிகர்கள் கூறுவதாக தெரிவித்தார். இறுதியாக ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணைங்க சாமி திரைப்படத்தின் வசனத்தை கூறி நிறைவு செய்தார்.