“கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார் என்பதற்கான வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு நிர்மலா சீதாராமன் தயாரா ?” என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற திறந்தவெளி கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதியை தராமல் தமிழக மாணவர்களுடைய கல்வி வாழ்வில் மண்ணள்ளிப் போடுகின்ற வேலையை பிஜேபி அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.
அழிந்து கொண்டிருக்கின்ற சமஸ்கிருதத்திற்கு தான் முன்னுரிமை அதற்கு தான் கூடுதல் நிதி ஒதுக்கீடு என்பதுதான் இவ்வளவு காலம் இருக்கிறார்.
பழைய ஓய்வுது திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிதி இல்லை என்று மாநில அரசாங்கம் கூறுவது ஏற்கத்தக்க காரணம் அல்ல.
காஞ்சிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற திறந்தவெளி கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய 24 வது மாநாட்டை முன்னிட்டு திறந்தவெளி கருத்தரங்கம், நிதி அளிப்பு மற்றும் பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சண்முகம் பங்கேற்று இருந்தார் அப்போது செய்தியாளர் சந்திப்பில்;
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் பல்லாயிரக்கணக்கான காலிப் பணியிடங்களாக பல பத்தாண்டுகளாக வைக்கப்பட்டிருக்கிறது. நிரந்தர பணியாளர்கள் ஓய்வு பெற்றால் புதிய நியமனம் என்பது இல்லை என்ற நிலம் ஏற்பட்டிருக்கிறது, இதன் விளைவாக படித்த இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு என்பது அரிதாக போய்க்கொண்டிருக்கிறது என்பது மத்திய மாநில அரசு கவனத்திற்கு தெரிவிக்க தெரிவிக்க வேண்டும்.
அதனால் மத்திய மாநில அரசாங்கம் அரசு காலி பணியிடங்களில் உடனடியாக பணி நியமனம் செய்வதற்காக இளைஞர்களுக்கு நிரந்தர வேலையை உத்தரவாதம் படுத்த வேண்டும் என்று வற்புறுத்த வேண்டியது, அதேபோன்று தனியார் துறை தொழிற்சாலைகள் வந்தாலும் இந்திய நாட்டினுடைய தொழிலாளர் நலச் சட்டங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும் அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். மாறாக பன்னாட்டு நிறுவனங்கள் தலைமுறையாகவும் நடந்து கொள்வதை அனுமதிக்க கூடாது என்று இருக்க வேண்டியது ஒன்று,
தமிழ்நாட்டிற்கு எவ்வளவு செய்வதற்கு இருந்தாலும் மும்மொழி கொள்கை தொகுதி மறு வரை என்ற பெயரில் திசை திருப்புகிறார்கள் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு;
கடந்த பத்து வருடங்களாக என்ன செய்தார்கள் இந்தி திணிப்பு மொழி திணிப்பு என்கின்ற பிரச்சனை என்பதை இப்போதுதான் வந்தது, தமிழ் மொழி வளர்ச்சிக்கும் மற்ற பணிக்கும் போதுமான நிதி என்பது 10 வருடங்களாக எதுவும் பண்ணவில்லை, ஆகவே அழிந்து கொண்டிருக்கின்ற சமஸ்கிருதத்திற்கு தான் முன்னுரிமை அதற்கு தான் கூடுதல் நிதி ஒதுக்கீடு என்பதுதான் இவ்வளவு காலம் இருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார் என்பதற்கான வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு நிர்மலா சீதாராமன் தயாரா ? என்று கேள்வி எழுப்பினார், நிர்மலா சீதாராமன் தான் இப் பிரச்சினையை திசை திருப்புகிறார்,
நிதியை தராமல் தமிழக மாணவர்களுடைய கல்வி வாழ்வில் மண்ணள்ளிப் போடுகின்ற வேலையை பிஜேபி அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது ஒன்றிய பிஜேபி அரசாங்கம் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்,
“பல்வேறு போராட்டங்களுக்கு அரசாங்கம் அனுமதி தராமல் மறுக்கிறது” என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு;
இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செந்துவுண்டர் அணிவகுப்பு நடந்திருக்கிறது, காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்ற ஒரு பிரச்சனை இல்லை, ஒரு சில போராட்டங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுப்பது அனுமதி கொடுக்காமல் இருப்பது மேல் கூறுகிறார்கள், காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்,
ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த 21 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி உள்ளார்கள். நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் சம்பந்தமாக அறிவிப்பு வரும் என்று அவர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது, அந்த எதிர்பார்ப்பு வராததால் மிகப் பெரிய ஒரு ஏமாற்றத்தை உண்டாக்கியது அதனால் இன்று அரசோடு கவனத்தை ஏற்க தக்க வகையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வுது திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிதி இல்லை என்று மாநில அரசாங்கம் கூறுவது ஏற்கத்தக்க காரணம் அல்ல ஆகவே 2021 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.