Mon. Jun 30th, 2025

திமுகவின் ஸ்லீப்பர் செல்லா ஓபிஎஸ்?

By Joe Feb25,2025 #ADMK #DMK #OPS #sleeper cell

‘திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக ஓபிஎஸ் செயல்படுகிறார்” என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியம் அருகில் உள்ள அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலதிட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “திமுக மீது எவ்வளவு வெறுப்பு இருந்தால் மூதாட்டி ஒருவர், ஸ்டாலின் புகைப்படத்தின் மீது மண்ண அள்ளி வீசுவார்” என்று, கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிலும் கொடுமை என்னவென்றால், அந்த பாட்டியை தேட காவல் தனிப்படை அமைக்கபட்டு உள்ளது” என்றும், வேதனை தெரிவித்தார்.

அப்போது, ஓபிஎஸ் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “எம்.ஜி.ஆர். மாளிகையின் தூண் கூட, ஓபிஎஸ்-ஐ துரோகி என சொல்லும் என்றும், திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக ஓபிஎஸ் செயல்படுகிறார்” என்றும், ஜெயக்குமார் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

மேலும், “திமுகவை வளர்க்க வேண்டும் என்பது தான் ஓபிஎஸ்-ன் எண்ணமாக உள்ளது என்றும், அதிமுக மூலமாக வளர்ந்த ஓபிஎஸ், அதிமுகவுக்கு விசுவாசமாக இல்லாதது பெரிய வருத்தமாக உள்ளது” என்றுமு், அவர் கவலைத் தெரிவித்தார்.

அத்துடன், “Appa செயலிக்கு ஜெயக்குமார் பதில் அளித்து பேசிய போது, “செயல்பாடற்ற அரசாங்கம் செயலியை மட்டும் தான் உருவாக்க முடியும் என்றும், தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை ஜாதிய கலாச்சாரம், ஜாதிய கொடுமைகள் உள்ளிட்டவற்றால் சீரழிந்து கிடக்கிறது என்றும், தமிழக அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கிடையாது என்றும், தமிழ்நாட்டை கோமாளி அரசாங்கம் ஆண்டு கொண்டு இருக்கிறது” என்றும், மிக கடுமையாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *