பாஜக தலைவர் அண்ணாமலை அஜித்திற்கு அரசியலுக்கு வர சொல்லி அழைப்பு விடுப்பது போல், மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அதாவது, என்ன நடந்துச்சுனா.. “இந்தியாவிற்கு பெருமை சேர்த்துட்டீங்க..! தமிழ்நாட்டுக்கு எப்ப பெருமை சேர்க்க போறீங்க..! #TN welcome You AK வாங்க தல!! – விரைவில் மலை!!!” இப்படியான வாசகங்கள் இடம் பெற்ற போஸ்டரில், பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் அஜித்தை அரசியலுக்கு வர சொல்லி அழைப்பு விடுப்பது போல், மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
குறிப்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்தோடு அஜித்தின் புகைப்படும் சேர்க்கப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் குமார், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து உள்ளார். “விடாமுயற்சி” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நாளை உலகம் முழுவதும் அஜித் நடிப்பில் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையில் வெளியாக உள்ள திரைப்படம் “குட் பேட் அக்லி”.
இந்தப் படத்தின் டிரைலர் டீசர் ரசிகர் மத்தியில் பெரும் உற்சாக வரவேற்பை பெற்று உள்ளதை முன்னிட்டு, திரைப்படத்திற்கு ஆன ரிசர்வேஷன் புக்கிங்களும் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது.
இதனால், நாளை திரைப்படத்தை கொண்டாட அஜித் ரசிகர்கள் திரையரங்கில் கட்டவுட் வைத்து கொண்டாட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான், மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டி உள்ள போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் ஒட்டி உள்ள போஸ்டரில் தலைமைச் செயலகம் முன்பு பாஜக தலைவர் அண்ணாமலையோடு நடிகர் அஜித்குமார் கோட் சூட் உடை அணிந்து நடந்து வருவது போலவும்,
இந்தியாவிற்கு பெருமை சேர்த்துட்டீங்க.. தமிழ்நாட்டுக்கு எப்ப பெருமை சேர்க்க போறீங்க..?
# TN welcome You AK
வாங்க தல!! என அண்ணாமலை அழைப்பது போலவும், விரைவில் மலை!!!என்று பதில் கூறுவது போன்ற வாக்கியங்களுடனான போஸ்டர்களை, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டர் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
முக்கியமாக, விஜயின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து அவரது ரசிகர்கள் முழுநேர அரசியல்வாதியாக மாறிக்கொண்டு வரும் சூழலில், மற்றொருபுறம் அஜித் ரசிகர்களும் அஜித்தை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கும் வகையில் போஸ்டர் ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வு, சினிமா வட்டாரத்திலும் பேசும் பொருளாக மாறி உள்ளது.