“ஜெய்லர்” திரைப்பட புகழ் நடிகர் வசந்த் ரவி, “திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
அண்ணாமலையாரை நினைத்து மனமுருக தியானம் செய்த திரைப்பட நடிகர் வசந்த் ரவி… செல்பி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்…
உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு கடந்த சில தினங்களாகவே திரைப்பட நடிகர்கள், நடிகைகள், துணை நடிகர்கள் இசையமைப்பாளர்கள் என பலரும் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் வருகின்றனர்.
அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்த்திற்கு மகனாக நடித்து பிரபலமான நடிகர் வசந்த் ரவி, தற்போது தனது குடும்பத்தினருடன் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்தார்.
முன்னதாக, திருக்கோவில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் திருக்கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டவர். அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு நடிகர் வசந்த் ரவி, சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, நடிகர் வசந்த் ரவி உண்ணாமலை அம்மன் சன்னதி அருகே கல் தூணில் அமர்ந்து அண்ணாமலையாரை நினைத்து மனமுருக கண்களை மூடிக்கொண்டு தியானம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் வசந்த் ரவிக்கு திருக்கோவில் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, திரைப்பட நடிகர் வசந்த் ரவியுடன் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.