தமிழக சட்ட பேரவையில் தமிழக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மறைமுகமாக தாக்கி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
“நிதியும் இல்லை.. அதிகாரமும் இல்லை.. என புலம்பி தீர்த்த அமைச்சர்..
பாசிட்டிவாக பேசுங்கள்…” என அமைச்சருக்கு அறிவுரை வழங்கிய பேரவைத் தலைவர்..
“தகவல் தொழில் நுட்பத்துறைக்கு நிதியும் இல்லை அதிகாரமும் இல்லை” என அத்துறையின் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேரவையில், தனது ஆதங்கத்தையும், வேனையையும் வெளிப்படுத்தி உள்ளார்.
என்ன நடந்தது வாங்க விரிவாக பார்க்கலாம்…
சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் பொன் ஜெயசீலன், “தனது கூடலூர் தொகுதியில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் தகவல் தொழில் நுப்ட பூங்கா அமைக்க வேண்டும்” என்று, கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்து பேசிய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுவதாகவும், மற்ற மாநிலங்களில் இருப்பது போல் அல்லாமல், தொழில் பூங்காக்களில் சிறு பகுதி மட்டுமே தகவல் தொழில் நுப்டத்துறை வசம் இருப்பதாகவும்” வேதனை தெரிவித்தார்.
அத்துடன், “டைடல் பார்க், நியோ டைடல் பார்க் போன்றவைகள் தொழில் துறை வசம் இருக்கும் அசாதாரண நிலையே தொடர்வதாகவும்” அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நிதி, திறன் மற்றும் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதை கேட்டால், அது கிடைக்கும்” என்றும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வேதனையுடன் தனது ஆதங்கத்தை பதிலாக அளித்தார்.
அப்போது, குறுக்கிட்ட பேரவைத்தலைவர் அப்பாவு, “துறை சார்ந்த பிரச்னைகளை முதலமைச்சரிடம் தனியாக பேசி தீர்வு காண வேண்டும் என்றும், உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் என்ற முறையில் பாசிட்டிவான பதிலை வழங்க வேண்டும்” என்றும், தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு அறிவுரை வழங்கினார்.
இதனினடையே, தமிழக அமைச்சரவையில் இடம் பெற்று உள்ள தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக சட்ட பேரவையிலேயே தமிழக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் மறைமுகமாக தாக்கி பேசியது தமிழக அரசியலில் பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.