தமிழக சட்டப்பேரவையில்
ஊரக வளர்ச்சித் துறைக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் படி,
– 500 கிராம ஊராட்சிகளுக்கு அலுவலக கட்டங்கள் புதிதாக கட்டப்படும்
– ஊரக பகுதிகளில் 500 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்
– ஊரக பகுதிகளில் 500 முழு நேர நியாய விலைக்கடைகள் 61 கோடியில் கட்டப்படும்
– பசுமை தமிழ்நாட்டி இயத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் 1 கோடி மரக்கன்றுகள நடப்படும்.
– ஊரகப் பகுதிகளில் 500 அரசு பள்ளிகளில் 50 கோடியில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.
– ஊரக பகுதிகளில் இயற்கை மற்றும் நீர்வள பணிகள் 500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
– ஊரக பகுதிகளில் உள்ள மண் சாலைகள் 150 கோடியில் ஓரடுக்கு கப்பி சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.
– ஊரக பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் சந்துகளை மேம்படுத்தும் பணிகள் 350 கோடியில் மேற்கொள்ளப்படும்.
– ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் குழந்தை நேய வகுப்பறைகள் 182 கோடியில் கட்டப்படும்.
– ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் 60 கோடியில் மேற்கொள்ளப்படும்.
– ஊரக பகுதிகளில் 800 கோடியில் உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்படும்
– ஊரக பகுதிகளில் 300 கோடியில் 1200 புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்படும்.
– நகர்புறத்தை ஒட்டியுள்ள 690 ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதியாக 69 கோடி வழங்கப்படும்.
– 278 மலைக்கிராம ஊராட்சிக்கு சிறப்பு நிதியாக 30 கோடி வழங்கப்படும்.
– வன உரிமை சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு 10 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்.
– தூய்மை பணியாளர்கள் நலப்பணிகளுக்காக தூய்மை தொழிலாளர் நல வாரியத்திற்கு 5 கோடி வழங்கப்படும்.
– 10 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் புதிதாக கட்டப்படும்.
– நமக்கு நாமே திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு 150 கோடியாக உயர்த்தப்படும்
– பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கிராமபுறங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 1500 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்படும்.