Mon. Jun 30th, 2025

ஐபிஎல் ரசிகர்களின் செல்போன்களை திருடும் வட மாநில கும்பலின் கூட்டாளிகள் சிக்கினர்!

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ரசிகர்களின் செல்போன்களை திருடும் வட மாநில கும்பலின் கூட்டாளிகள் அதிரடியாக தமிழக போலீசாரிடம் சிக்கி உள்ளனர். வேலூரில் சிக்கிய 3 பேரை சென்னை கொண்டு வந்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்களுக்கிடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்களின் செல்போன்களை நூதன முறையில் திருடிய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ஆகாஷ் நோநியா, விஷால் குமார் மாட்டோ, கோபிந்த் குமார் என்பதும், இவர்களுடன் 4 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடமிருந்து 38 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்த கும்பலின் கூட்டாளிகள் வேலூரில் பதுங்கி இருப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வேலூர் போலீசாரை உஷார் படுத்தி கைது செய்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராகுல்குமார், ஜிதேந்திர சஹனி, பர்வீன் குமார் மஹதோ ஆகிய 3 பேரை வேலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் வேலூர் வந்து 3 பேரையும் விசாரணைக்கு சென்னைக்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *