இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சில சமயங்களில் அந்த சம்பவங்கள் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நம்மை ஆச்சர்யப்படவும் வைக்கின்றன. தற்போது அப்படி ஒரு சம்பவத்தை பற்றியும், அதற்கான மருத்துவ காரணத்தை பற்றியும் தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
வாலுடன் பிறந்த பெண் குழந்தை..
சமீபத்தில் மெக்சிகோ நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்த மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு இருந்தார். நீண்ட நேரம் பிரசவ வழியால் துடித்த அந்த பெண்ணிற்கு, அறுவை சிகிச்சை முறையில் மருத்துவர்களபிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, நடந்த ஒரு விஷயம் தான் மருத்துவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதாவது, அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் பின்புறத்தில் 2 அங்குல நீளத்தில் வால் ஒன்று காணப்பட்டு உள்ளது.
அறுவை சிகிச்சை..
உடனே, மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த வாலை நீக்கி விட்டனர். தற்போது, அந்த குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல், இந்தியாவில் அர்ஷித் அலி கான் என்ற ஒரு குழந்தை வாலுடன் பிறந்தது. 14 வயதாகும் வரை அந்த சிறுவன் வாலுடனே தான் இருந்துள்ளான். அந்த சிறுவனை அனுமானின் மறுபிறவி என்று கூறி, அவனை மக்கள் வணங்கி வந்தனர். பின்னர் அந்த சிறுவனுக்கு விருப்பம் இல்லாததாலும், தொந்தரவாக இருந்ததாலும் மருத்துவர்கள் அந்த வாலை அகற்றிவிட்டார்கள்.
வாலுடன் பிறக்க என்ன காரணம்?
எல்லா குழந்தைகளுக்கும் இதுபோல நடப்பது கிடையாது. இருப்பினும், இம்மாதிரியான அரிதான சம்பவத்திற்கான காரணத்தை மருத்துவர்கள் விவரித்துள்ளனர். அதாவது, கர்ப்பத்தின் 6வது வாரத்தில், ஒரு கர்ப்பிணி பெண்ணின் கருமுட்டையில் பல எலும்புகளுடன் கூடைய ஒரு வால் போன்ற ஒரு உறுப்பு இருக்கும். இருப்பினும், அடுத்த 2 வாரங்களில் முதுகெலும்புகள் வளருவதால் அந்த வால் மறைந்து வால் எழும்பாக உருவாகிவிடும்.
ஆனால், சில குழந்தைகளுக்கு அந்த வால் அப்படியே இருக்கும். இதுவே குழந்தைகள் வாலுடன் பிறக்க காரணம். இந்த வாலை மருத்துவ துறையில் ‘வெஸ்டிஷியல் வால்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வாலில் எலும்புகள் இருக்காது. எனவே, இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. சில சமயங்களில் தண்டுவடம் முழுவதுமாக கூடவில்லை என்றாலும் இதுபோன்று வால் உருவாகும். எனவே, அவற்றை அறுவை சிகிச்சை மூலமே எளிதில் அகற்றிவிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.