“கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சனம்” செய்துள்ளார் யூட்யூபர் சவுக்கு சங்கர்.
தனது மீடியாவில் அரசு தொடர்பான ஊழல்களை எடுத்துப் பேசி வருகிறேன்.
மாநகராட்சியில் வாகனம் வழங்கியதில் பெரிய முறையீடு நடந்துள்ளது. இதில் காங்கிரஸ் செல்வப் பெருந்தகை 150 கோடி ரூபாய் அளவிற்கு மாநகராட்சி வழங்கிய வாகனத்தில் பயனடைகிறார்.
சுத்திகரிப்பு தொழிலாளர்களை நான் அவதூறாக பேசியதாக கைது செய்தார்கள். இதனையடுத்து நீதிமன்றம் விசாரணை செய்தபோது இது போன்ற எந்த பதிவும் செய்யவில்லை என்பது நீதிமன்றத்தில் தெரியவந்தது.
மாநகராட்சி வழங்கிய வாகனத்தில் 230 பேருக்கு வாகனம் வழங்கப்பட்டது. அதில் 130 பேர் காங்கிரசைச் சார்ந்தவர்கள். இதில் செல்லவப் பெருந்தகை ஊழல் செய்திருக்கிறார் என பதிவு செய்திருந்தேன். வேறொரு வழக்கில் மதுரையில் கைது செய்யப்பட்ட போது சென்னையிலிருந்து ஆய்வாளர்கள் நான்கு முறை விமான மூலமாக வந்தார்கள். அப்போது அவர்களுக்கு விமான டிக்கெட் செல்வப் பெருந்தகை தான் எடுத்துக் கொடுத்தது தனக்கு பின்னர் தான் தெரிய வந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வ பெருந்தகையும் திருவேங்கடமும் இருந்துள்ளார்கள். அதில் செல்வப் பெருந்தகை உத்தரவு இணங்க திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்று நடைபெற்ற தாக்குதல்களில் காங்கிரஸ் வழக்கறிஞர் வாணிஸ்ரீ என்பவர் சுத்திகரிப்பு தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு இது போன்ற தாக்குதல்களை ஈடுபட்டுள்ளார்கள்.
என்னுடைய வீடு இருக்கும் முகவரி காவல்துறையை தவிர வேறு யாருக்கும் தெரியாது.
காங்கிரஸ் கட்சி சார்ந்த நபர்கள் ஊர்வலமாக வந்து என்னுடைய வீட்டில் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் இது உளவுத்துறைக்கு தெரியாதா?
கடந்த மூன்று மாதங்களாக தான் கீழ்ப்பாக்கம் வீட்டில் குடியிருந்துள்ளேன். இந்த தாக்குதலுக்கு பிறகு வீட்டின் உரிமையாளர் உடனடியாக காலி செய்ய சொல்லிவிட்டார்கள்.
இன்று என்னுடைய தாயார் தான் வீட்டில் இருந்தார்கள். அவர்தான் புகார் அளித்துள்ளார். நேரில் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 50 நபர்கள் அத்துமீறி உள்ளே புகுந்து மற்றும் சாக்கடைகளை வீட்டில் கொட்டி விட்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனை அடுத்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சட்ட வல்லுனர்கள் தகவல்களை வாங்கிய பிறகு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிப்பார்கள்.
இந்த சம்பவத்தில் காவல்ஆணையர் அருண், செல்வ பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக தெளிவாக தெரிகிறது. நான் சிறையில் இருந்த பொழுது அதே பிளாக்கில் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்னுடன் இருந்தார்கள். அவர்கள் கொடுத்த தகவலின் தான் செல்வ பெருந்தகைக்கு அதில் இருப்பது தெரிய வந்தது.
என்னுடைய வீட்டில் மலத்தை கரைத்து சமையலறை, படுக்கையறை அனைத்து இடங்களிலும் ஊற்றி இருக்கிறார்கள். அப்படி என்ன தவறு நான் செய்து விட்டேன்.
நான் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து 40 நிமிடத்திற்கு பிறகு தான் காவல்துறையினர் அங்கு வந்தார்கள். தமிழக அரசை பற்றி நான்கு வருடங்களாக பேசி வருகிறேன். ஆயிரம் விமர்சனங்கள் முதல்வர் மீது வருகிறது. இது சவுக்கு சங்கர் வீட்டின் மீது ஊற்றப்பட்ட மலம் அல்ல தமிழக அரசின் மீதும், தமிழக சட்டம் ஒழுங்கு நிலை மீது ஊற்றப்பட்ட மலம் என்று மிகக் கடுமையாக சவுக்கு சங்கர் சாடியுள்ளார்.