குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தமிழ்நாட்டின் நிலை என்ன? மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் எத்தனை சதவிகிதம் குற்றச் சம்பவங்கள் பதிவாகி இருக்கிறது என்ற விபரங்கள் தெரிய வந்திருக்கிறது.
இந்தியா முழுக்க இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால், உலகம் முழுவதுமே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது என யுனிசெப் தரவுகள் கூறுகிறது. அந்த வகையில், தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போதைய நிலை என்ன? பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவர்களின் வாழ்க்கை நிலை என்ன? என்பதையும் கவனத்தில் கொள்ளக் வேண்டியது மிக முக்கியமானதாக உள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்களில் இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த 2022 -ஆம் ஆண்டு நிலவரப்படி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 8.7 சதவீதம் அதிகரித்திரித்து உள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 62 ஆயிரம் பாலியல் குற்றங்கள் பதிவாகி உள்ளதாகவும் NCRB ரிப்போர்ட் கூறியுள்ளது.
அதே போல், கடந்த 2021-ஆம் ஆண்டில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக இந்தியாவில் 51 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில், மூன்றில் ஒரு பங்கு தென்னிந்தியாவில் அரங்கேரித்து இருப்பதாகவும் தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதாவது, சுமார் 13 ஆயிரம் வழக்குகள் இதன்படி பதியப்பட்டு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில், தமிழ்நாடு 4 ஆயிரத்து 500 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இப்படியாக, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கக்கூடிய மாநிலம் என்ற பெயரை பெற்று உள்ளது தமிழ்நாடு!
இதன் வெளிப்பாடகவே, தமிழ்நாட்டில் சமீப காலமாக பள்ளி வளாகம் மற்றும் பொது வெளிகளில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வரும் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்படியாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் புரிகிறவர்களால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு அவ பெயர் ஏற்பட்டு, மொத்த ஆண்கள் சமூகத்திற்கும் பெரிய தலைகுணிவை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.