Mon. Jun 30th, 2025

ஆசிரியை 9 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை! என்ன நடந்தது?

தனியார் பள்ளி ஆசிரியை 9 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை ஓட்டேரி ஸ்டாரான்ஸ் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தேவிகா. இவர், புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் தினேஷ், தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சொந்தமாக பாத்திரக்கடை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், கணவன் – மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தேவிகா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த தேவிகா, வீட்டின் 9 மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதில், தேவிகா சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள், உடனே இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன். அதன் பேரில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று, ஆசிரியை தேவிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேவிகாவின் கணவர் தினேசை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல் சென்னையில் மற்றொரு சம்பவமாக, சென்னை சூளைமேட்டில் 72 வயது முதியவர் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீரப்பன் என்பவர் மீது ஜெகன் உள்ளீட்ட மூன்று சேர்ந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். குழந்தை மீது பந்து பட்டதை தட்டிகேட்ட வீரப்பன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு போக்சோ வழக்கில் வீரப்பன் சிறைக்கு சென்று வந்தவர்.

இது தொடர்பான போக்சோ வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், இது பொய் புகார் எனவும், எதிர் தரப்பு நீதிமன்றத்திக்கு வராத நிலையில், வழக்கு நடந்து வருவதாகவும் பாதிக்கப்பட்டவரின் மகன் தகவல் தெரிவித்து உள்ளார். அது முதல் வீரப்பனை வீட்டின் அருகே உள்ளவர்கள் ஆபாசமான வார்த்தைகளால் பேசி திட்டி வந்து உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மனைவியை பார்க்க சென்ற வீரப்பன் தனது மகள் மீது பந்து பட்டத்தை கேட்டப்போது வாக்கு வாதம் முற்றி, இரண்டு பெண்கள் கிரிகெட் பேட்டாலும், ஜெகன் என்பவர் குத்து சண்டையில் அடிப்பது போல தாக்கி உள்ளார்.

இதில், அவர் சுருண்டு கீழே விழுந்த நிலையில் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சூளைமேடு போலீசார் ஜெகன் உள்ளீட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *