மது போதையில், பெண்ணை அறிவாளால் வெட்டியும், பெண்ணின் தந்தையை கடப்பாரையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினேஷ் என்ற தினேஷ் குமார் இதுவரை கஞ்சா மற்றும் மது போதையில் 8 நபர்களை கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளார்.
தேனி அருகே பள்ளப்பட்டியில் கிராமத்தில்
சுமார் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊரில் கடந்த மூன்று நாட்களாக கோவில் திருவிழா நடைபெற்று வந்த நிலையில் நேற்று நிறைவு நாளில் முளைப்பாரி கரைத்து விட்டு பொங்கல் விழா நடந்து கொண்டிருந்தது.
அப்போது, திருவிழாவில்
தினேஷ் என்ற தினேஷ் குமார் இதே ஊரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரை கடப்பாறையால் தாக்கியதோடு, அவரது மகளான மௌனிகா என்ற இளம் பெண்ணை அறிவாளால் வெட்டி தாக்கி காயப்படுத்தினார்.
அப்போது, படுகாயம் அடைந்த தந்தை மகள் இருவரையும் சிகிச்சைக்காக 108 வாகனத்தில் தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி தினேஷ் என்ற தினேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் போலீசார் தினேஷ் என்ற தினேஷ்குமாரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தினேஷ் என்ற தினேஷ் குமார் இதுவரை இந்த கிராமத்தில் கஞ்சா மற்றும் மது போதையில் ஆறுக்கு மேற்பட்ட நபர்களை அறிவால் மற்றும் கடப்பாறைகளால் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் தினேஷ் என்ற தினேஷ்குமார், கஞ்சா மற்றும் மது போதையில், உதயராஜா என்பவரின் இடது கை விரலை வெட்டி துண்டாக்கினார்.
இதே போல், இந்த ஊரில் கிருஷ்ணசாமி என்பவர் குளித்துக் கொண்டிருந்த போது அவரையும் அடித்து தண்ணீர் தொட்டியில் முட்ட வைத்து வைத்து கொலை வெறி தாக்குதல் நடத்தினார்.
இது வரை, தினேஷ் என்ற தினேஷ்குமார் கஞ்சா மற்றும் மது போதையில் 8 நபர்களை கொலைவெறி தாக்குதல் நடத்தி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நேற்று கோவில் திருவிழாவில் இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி தினேஷ் என்ற தினேஷ் குமாரை கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவம், பள்ளப்பட்டி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.