உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலில், மாசி பிரம்மோற்சவ குடியேற்றத்தை தொடர்ந்து நடைபெற்ற முதல் நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
காமாட்சி அம்மன் லட்சுமி, சரஸ்வதி தேவியர்களுடன் தங்கமான் வாகனத்தில் மீது எழுந்துருளி பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்து பக்தர்களுக்கு அருள் அருள் பாலித்தார்.
சக்தி தலங்களில் ஒட்டியான பீட ஸ்தலமாக விளங்கும் முதன்மை ஸ்தலமான உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
லட்சுமி சரஸ்வதியுடன் காமாட்சி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தருகே எழுந்தருள செய்து, ஸ்தானிகர்கள் வேத மந்திரங்கள் பாராயணம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தங்ககொடி மரத்தில் காமாட்சி அம்பாள் படம் பொறித்த கொடியை கோவில் ஸ்தானிகர்கள் ஏற்றி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, காமாட்சி அம்மன் லக்ஷ்மி சரஸ்வதி தேவியர்களுடன் இன்று இரவு தங்கமான் மீது எழுந்தருளி நான்கு ராஜ விதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து காட்சியளித்தார்.
இப்பிரம்மோற்சவத்தில் காலையிலும் மாலையிலும் பல்வேறு வாகனத்தின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அந்த வகையில், இவ்வுற்சவத்தின் முக்கிய உற்சவங்களான தங்க பல்லக்கு உற்சவம் வரும் 7-ஆம் தேதியும், ரத உற்சவம் 9-ஆம் தேதியும், வெள்ளி திருத்தேர் உற்சவம் 11 ஆம் தேதி இரவும் நடைபெற உள்ளது. மேலும், 14-ஆம் தேதி அதிகாலை விஸ்வரூப தரிசனத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. அதனை தொடர்ந்து, விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
இவ்விழாவினை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சி காமாட்சி அம்மனை நேரில் தரிசித்து அருள் பெறுவது குறிப்பிடத்தக்கது.